districts

img

காபியில் விஷம் கலந்து மருமகளுக்கு கொடுத்து கொன்றதாக புகார்

உதகை, ஆக.31- காபியில் சயனைடு கலந்து மருமகளுக்கு கொடுத்து  மாமியார் கொன்றதாக புகார் தெரிவித்து, சம்பந்தப்பட்ட வரை கைது செய்ய வேண்டும் என உதகையில் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம், உதகை வண்டி சோலைப் பகுதியை  சேர்ந்த அப்துல் சமது, நிலாபர் நிஷா தம்பதிக்கு ஒரு  மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ஆஷிக பர்வீன். மற்றும்  உதகை பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஜவ ருல்லா ஆட்டோ டிரைவர், மனைவி யாஸ்பின் இவர்க ளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன்  இம்ரான்(27). ஆஷிக பர்வீன் இம்ரான் ஆகிய இரண்டு  பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள் ளனர். பின்னர், இரு வீட்டாரின் சம்மதத்தோடு, கடந்த  2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக ளுக்கு, 6 மாத பெண் குழந்தை உள்ளது.   இதனிடையே, மாமியார் மருமகளுக்கு இடையே  அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகி றது. இந்நிலையில், மருமகள் ஆஷிக பர்வினை மாமி யார் கொலை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படு கிறது. இதற்காக உதகை மெயின் பஜார் பகுதியில் உள்ள  ஒரு நகை கடையில் நகைக்கு பாலீஸ் போடும் சய னைடை வாங்கி வந்து மருமகளுக்கு  காபியில் கலந்து  கொடுத்துள்ளதாக  கூறப்படுகிறது. கடந்த, ஜூன் 23  ஆம் தேதியன்று ஆஷிக பர்வீன் மர்மமான முறை யில் இறந்துள்ளார். ஜூன், 24 ஆம் தேதியன்று பெண் ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் உதகை  ஜி 1 காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் உடற்கூறுகளை பூனாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பினர். பூனாவிலிருந்து  வந்த ஆய்வறிக்கையில் காபியில் நகைக்கு பயன் படுத்தும் சயனைடை கலந்து கொடுத்து கொலை செய்த தாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.  இந்நிலையில், கடந்த வாரமே கொலை என்று காவல் துறையினருக்கு தெரிந்தும் தற்போது வரை சம் பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சனியன்று உறவினர்கள் மற்றும் பொது மக்கள் உதகை ஜி 1 காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர் யசோதா மற்றும் போலீசார் போராட் டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தந்தை அப்துல் சமது கூறுகையில், ஆய்வறிக்கையில் எனது மகள் ஆஷிக பர்வீனை,  நகைக்கு பயன்படுத்தும் சயனைடை காபியில் கலந்து  கொடுத்து கொலை செய்தது உறுதி செய்யப்பட் டது. இதற்கு உடந்தையாக இருந்த மாமனார்  ஜவருல்லா, மாமியார் யாஸ்பின், மாப்பிள்ளை  இம்ரான், இவரின் தம்பி முக்தார் மற்றும் சம்பந்தப்பட்ட  நபர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். என்றார்.