districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி, டிச.21- தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-  தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆட்சியர்   அலுவலகத்தில் உள்ள கூடுதல்  கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) 11 மணிக்கு  நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை  சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர் பான தங்கள் கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரி வித்து பயன்பெற வேண்டும்.  இவ்வாறு இதில் கூறப் பட்டுள்ளது. 

அஞ்சல் துறை - மக்கள் நீதிமன்றம்

கோவை, டிச.21- அஞ்சல் துறை சார்பில் மக்கள் நீதிமன்றம் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் கோவை கோட்டக் கண்காணிப் பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது, கோவை மண்டல அளவிலான அஞ்சல் துறை யின் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) முடிவடையும் காலாண்டுக்கான கோட்ட அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவையில் டிச.31ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு, கோவை கோட்டம், குட் ஷெட் சாலை, கோயம்புத்தூர் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் சாலை மறியல்

அவிநாசி, டிச.21- பெருமாநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் செவ்வாயன்று இரவு  சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பெருமாநல்லூர் மேற்கு வீதியில் தனிநபர் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியிருந்தனர். இதற்கிடையில் செவ்வாயன்று அப்பகுதியில், மீண்டும்  தனிநபர் கம்பி உள்ளிட்ட பொருள்களை கொண்டு வந்து ஆக் கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஊராட்சி  மன்றத் தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, துணைத் தலைவர்  வேலுச்சாமி ஆகியோர் இரவு அப்பகுதிக்கு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த  முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, தனிநபர் தாக்க வந்ததாகவும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்கக் கோரியும் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, துணைத் தலைவர் சிடிசி வேலுச்சாமி உள்ளிட் டோர் திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நெழலி பட்டா பிரச்சனையில் வருவாய் துறையின்  குழப்பமான முடிவால் பாதிக்கப்படும் பொது மக்கள்

திருப்பூர், டிச. 21 – திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட் டம், நெழலி கிராமத்தில், வீட்டுமனைப் பட்டா வழங்கிய பிரச்சனையில் மாவட்ட  நிர்வாகம் மேற்கொண்ட முன்னுக்குப் பின்னான முடிவினால் அங்கு பட்டா பெற்று குடியிருந்து வரும் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் சுமூகமான சரியான  தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். காங்கேயம் வட்டம் நெழலி கிரா மத்தைச் சேர்ந்த 440 குடும்பத்தாருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப் பட்டது. ஆனால் பட்டா பெற்றவர்களில் 19 பேர் மட்டுமே அங்கு வீடு கட்டி  குடியேறினர். மற்றவர்கள் பல ஆண்டுக ளாக குடியேறாத நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சியர் மூலம்  எஞ்சிய 421 பேரின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த இடத்தில் திருப்பூர் தெற்கு  வட்டத்தைச் சேர்ந்த 315 பேருக்கு பட்டா  வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட வர்களுக்காக அங்கு நில அளவைக்கு அதிகாரிகள் சென்றபோது, ஏற்கெ னவே 2000ஆம் ஆண்டில் பட்டா பெற்று  ரத்து ஆனவர்கள் நில அளவை செய்ய  விடாமல் தடுத்தனர்.  இதையடுத்து நெழலி கிராம ஊராட் சித் தலைவர், எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 30  பெண்கள், 10 ஆண்கள் உள்பட பட்டா  ரத்து செய்யப்பட்டவர்களுடன் அரசு நிர் வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தெற்கு வட்டத்தைச் சேர்ந்த 315  பேருக்கு கொடுக்கப்பட்ட பட்டா போக  எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட மனை  இடங்களை நெழலி கிராமத்தைச்  சேர்ந்தவர்களில் தகுதியுள்ளவர்க ளுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட் டது. ஆனால் அதன் பிறகும் 2000 ஆம்  ஆண்டு பட்டா பெற்று ரத்தானவர்கள் அந்த இடத்தில், தற்காலிக குடிசைகள்,  சிமெண்ட் செட், தகரம், ஹாலோ பிளாக்  கற்கள் ஆகியவற்றால் 85 குடிசைகள் அமைத்துள்ளனர். இதையடுத்து கடந்த மே மாதம் தாரா புரம் வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் காங்கேயம் வட்டாட்சியர் அலு வலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் புலத்த ணிக்கையின்போது குடியிருந்த 19 பேரின் வீட்டுமனைகள் தவிர்த்து, மற்ற இடங்களை மறு நில அளவை செய்து 3 சென்ட் மனையிடத்திற்கு பதிலாக 2 சென்ட் மனையிடம் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதனால் முதல் முறை பட்டா வழங்கி ரத்து  செய்யப்பட்டு, இரண்டாவது முறை யாக 315 பேருக்கு கொடுக்கப்பட்ட பட் டாவையும் ரத்து செய்வது என தீர்மா னித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவு  தற்போது அங்கு பட்டா பெற்று தற்கா லிக குடிசை அமைத்து வாழ்ந்து வருவோ ரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள் ளது. 2000ஆவது ஆண்டில் முதல் முறை யாக பட்டா பெற்று குடியிருப்போர் தவிர்த்து, இரண்டாவது முறையாக 2009 ஆம் ஆண்டு பட்டா பெற்றவர்களிலும் பலர் அங்கு குடிசை அமைத்து வசித்து  வருகின்றனர். இந்நிலையில் மறு நில அளவை என்றால், ஏற்கெனவே பெற்றி ருக்கும் இடத்தில் 1 சென்ட் குறைவது டன், அவர்கள் குடியிருக்கும் இடமும்  கைவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுள் ளது. அவரவர் வசதிக்கு ஏற்ப ஆயிரக்க ணக்கில் இருந்து ஓரிரு லட்சம் ரூபாய்  வரை செலவிட்டு வீடு கட்டியோர் பாதிக் கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம், தெளிவான, உறு தியான முடிவெடுக்காமல் முன்னுக்குப்  பின் முரணாக இப்பிரச்சனையைக் கையாண்டதால் தற்போது குழப்பமான  நிலை நீடித்து வருகிறது. எனவே இப்பி ரச்சனையில் ஏற்கெனவே அங்கு குடியி ருப்போர் பாதிக்காதபடி உரிய தீர்வு காண வேண்டும் என்று நெழலி கிராமத் தினர் எதிர்பார்க்கின்றனர்.

மாநகர காவல் துறையின்  மக்கள் குறை தீர் கூட்டம்

திருப்பூர், டிச. 21 - திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று தீர்வு காணும் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடை பெற்று வருகிறது. இதில் மக்கள் புகார் மனுக்களை மாநகர  காவல் ஆணையரிடம் வழங்குகின்றனர்.  இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை  இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்நிலையில் தமி ழக டிஜிபி சைலேந்திரபாபு, மாநகர ஆனையருக்கு காவல் ளுக்கு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  உரிய அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்  அடிப்படையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர்  15ஆம் தேதி வரை 208 பேர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்  அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தனர். இதில் 163 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 45 மனுக்கள் தீர்வு காணப்படாத நிலையில் புகார் கொடுத்த பொதுமக்களை நேரில் அழைத்து காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து  திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கேட்டறிந் தார். காவல்துறை நடவடிக்கை திருப்திகரமாக இல்லாததை  மக்கள் கூறியதை தொடர்ந்து மீண்டும் விசாரணை செய்ய  காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் மனுதாரர்களின் கருத்துக்களை முறையாக விசா ரித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுக்கு அனுப்பப்படும் என  மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

வழிப்பறி: மூவருக்கு  மூன்றாண்டு சிறை

அவிநாசி, டிச. 21- சேவூர் அருகே சாவக்கட் டுப்பாளையத்தில் 2014ஆம் ஆண்டு பெண்ணிடம் 2  பவுன் தங்கச் சங்கிலி பறித்த  வழக்கில் தொடர்புடை கோபியைச் சேர்ந்த கிஷோர் (30), குன்னத்தூர் தாளப்ப தியைச் சேர்ந்த இம்ரான்(32),  திருப்பூரைச் சேர்ந்த மோகன் குமார் (35) ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். இந்நிலை யில் இவ்வழக்கு அவிநாசி  குற்றவியல் நடுவர் நீதிமன் றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு வந்தது. இதில், இவ்வழக்கில் தொடர் புடைய 3 பேருக்கு 3 ஆண்டு  சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.15/60அடி நீர்வரத்து:83கன அடி வெளியேற்றம்:108கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.41/90அடி.நீர்வரத்து:531கனஅடி வெளியேற்றம்:563கனஅடி

சர்க்கரை ஆலை திறப்பு விழாவில் அதிமுக, திமுக இடையே தள்ளுமுள்ளு

தருமபுரி, டிச.21- பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பு விழாவில் அதிமுக, திமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இதுவும் ஒன்றாகும்.  சர்க் கரை ஆலைக்கு பாலக்கோடு சுற்றியுள்ள மல்லாபுரம், பெல் ரம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம் பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர், காரிமங்கலம் பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி போன்ற பகுதிகளில் உள்ள  கரும்பு விவசாயிகள், தாங்கள் விளைவித்த கரும்பைப் பதிவு செய்து ஆலைக்குக் கொடுத்து வருகின்றனர். நடப்பாண் டில் 2 லட்சம் டன் அரவை நிர்ணயிக்கப்பட்டு, டிச.21ஆம் தேதி யன்று அரவை பணி துவக்க விழா நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவித்திருந்தார். இந்நிலையில், சர்க்கரை ஆலை அரவை நிகழ்ச்சியை துவக்கி வைக்க அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவின ரும், திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான பழனியப்பன் தலைமையிலான திமுகவினரும் குவிந்த னர். இதில், அதிமுக அன்பழகனை துவக்கி வைக்க அழைத் துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் தகறாறு ஏற்பட்டது. இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட னர்.  இதனையடுத்து, மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளர் சிந்து இரு தரப்பினரிடையும் சமாதானம் செய்து, இரு தரப்பும் சேர்ந்து அரவை பணியை துவக்கி வைக்க முயற்சி மேற்கொண்டார். அதனை ஏற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன் பழகன், திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் இருதரப் பும் இணைந்து அரவை பணியை துவக்கி வைத்தனர். இந் நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் நாகராசன், பேரூ ராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் முருகன், மேலாண்மை இயக்குநர் சக்திவேல், சர்க்கரை ஆலை இயக்குநர்கள்  மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் திர ளாக கலந்து கொண்டனர்.

போதை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

கோவை, டிச.21- கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்த எஸ்.எஸ். குளம் பகுதியில், கோவில்பாளையம் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காபிகடை முதல் விளாங் குறிச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந் தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசா ரித்தனர். இதில், அவர்கள் சுண்டக்காபாளையத்தை சேர்ந்த  பூபாலன், சுப்பிரமணி என்பதும், அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே பூபாலன் காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். சுப்பிரமணியை போலீசார் கைது செய்த னர். அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சா, 10 போதை மாத்திரை கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய பூபா லனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண் சடலம் மீட்பு

உதகை, டிச.21- எமரால்டு சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில், ஆண் சடலத்தை காவல் துறையினர் மீட்டு விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த எமரால்டு பகுதி யில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. இதை எமரால்டு, சுரேந்திர நகர், பெரியார் நகர், நேரு கண்டி,  நேரு நகர், லாரன்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று எமரால்டு சுடுகாடு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக எமரால்டு காவல் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு சென்று  போலீசார் ஆய்வு செய்தனர். இதைத்தொ டர்ந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், எமரால்டு சுடுகாட் டில் மீட்கப்பட்டது 60 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ஆகும். 6 மாதத்திற்கு முன்னர் இந்த உடலை இங்கு வீசியி ருக்கலாம். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த  உடலை தான் பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொடுப்பார்கள். எனவே, ஏற்கனவே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த உடலை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள் ளோம், என்றனர்.'

சாலையில் கால்நடைகள் சுற்றினால் நடவடிக்கை

கோவை, டிச.21- சாலைகளில், தெருக்களில் ஆடு, மாடு களை சுற்றினால் சம்பந்தப்பட்ட கால்நடை களின் உரிமையாளருக்கு முதலில் அபராதம் விதிக்கப்படும் எனவும், பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது, சாலைகளில் சுற்றித்திரியும் மாடு களால் பொதுமக்களுக்கும், போக்குவரத் திற்கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை வாகனம் மூலம் பிடிக்க மாநகராட்சி நடவ டிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி மாட்டை பிடித்துச் செல்லலாம். அபராதம் செலுத்த தவ றும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநக ராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும். மேலும், பிடிபட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும்  சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையா ளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பேரா.போ.மணிவண்ணனுக்கு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கல்'

உதகை, டிச. 21- நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், பேராசிரிய ருமான போ.மணிவண்ணனுக்கு தமிழக அரசின்  2021 ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருது கிடைத்துள்ளது. புத னன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழா வில் இந்த விருதை தமிழக முதல்வர்  ஸ்டாலின் வழங்கி னார்.  நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், மேல்குந்தா - அட்டு மண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் பேரா.மணிவண்ணன். ஆரம்பக்கல்வியை உதகையிலும், இளங்கலை தமிழ் இலக் கியத்தை புதுக்கோட்டை கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் முடித்துள்ளார். பிறகு முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களை கோவையில் உள்ள பூ.சா.கோ. கலையறிவியல் கல்லூரியில் பயின்றார். 2011 ஆம் ஆண்டு ஆசிரிய தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப் பட்டு உதகை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் உதவிப் பேரா சிரியராக  பணிநியமனம் பெற்றார். உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உயராய்வுத்துறையில் 2011 முதல் 2021 வரை 11 ஆண்டுகள் பணியாற்றி 2021 பணி மாறுதல் பெற்று கடந்த ஓராண்டாக அவிநாசி அரசு கலை மற்றும்  உத விப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  கவிஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாற்றலாகவும், ஆய்வாளர் என பன்முகத்திலும் இயங்கி வருகிறார். இது வரையில் இவர் 15 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கு நிறைய நூல்களை மொழிபெயர்த்தி ருக்கும் இவர் தமிழ் மலையாள இலக்கிய உறவை மேம் படுத்தும் விதமாக பல நல்ல மலையாள நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இவருக்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது கிடைத் திருப்பதையறிந்து நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மின்தடை

நாமக்கல், டிச.21- ராசிபுரம் கோட்டம், மெட் டாலா துணை மின் நிலையத் தில் பராமபரிப்பு பணிகள் நடைபெறற உள்ளது. இத னால், வியாழனன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பிகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார் பாளையம், கார் கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில் பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக் குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பஞ்சோலை, பெரிய குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந் தாங்கல், கரியாம்பட்டி, வர கூர் கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் சார விநியோகம் நிறுத்தப் படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.