தருமபுரி, மார்ச் 9- மாநில அளவிலான மாற்றுத்திற னாளிகளுக்கான தடகள போட்டிகளில் பங்கேற்று வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி கணினி அறிவியல் துறை மூன்றா மாண்டு மாணவி வி.அபிநயா 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டு தல் ஆகிய மூன்று போட்டிகளிலும் முத லிடம் பெற்று தங்கம் வென்றார். மேலும், அதே துறையைச் சேர்ந்த ஆர்.பிரியங்கா என்ற மாற்றுத்திற னாளி மாணவி குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் இரண்டா மிடம் பெற்று வெள்ளி பதக்கங்கள் வென்றார். இந்நிலையில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி நடைபெற்ற சர்வ தேச மகளிர் தின விழா கொண்டாட்டத் தில், பதக்கங்கள் வென்ற மாணவி களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி பதக்கம் மற்றும் சான்றி தழ் வழங்கினார். இந்நிகழ்வில், தரும புரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி கிள்ளிவளவன், உடற் கல்வி இயக்குனர் முனைவர் பாலமுரு கன், பேராசிரியர்கள், மாணவ, மாண விகள் பலர் கலந்து கொண்டனர்.