தருமபுரி, மார்ச் 23- மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு, தூக்குமேடை ஏறிய மாவீரர் கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி, 8 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாவீரர்க ளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட் டது. இந்நிகழ்விற்கு, சங்கத்தின் கிளை பொறுப்பாளர் கே.கார்த்திக் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி கவுன்சிலருமான வே. விசுவநாதன், பகுதிச் செயலாளர் ஆர்.சக்திவேல், வாலிபர் சங்க பகு திக்குழு உறுப்பினர் எஸ்.ராஜசே கர், முன்னாள் தலைவர் கே.லோக நாதன், திராவிடர் கழக நிர்வாகி சின்னராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அவிநாசி ஒன்றியக்குழு சார்பில், சேவூர் சாலையில் அமைந்துள்ள கொடிமரத்தில் வெண் கொடி ஏற்றப்பட்டு, மாவீரர் கள் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் ஒன்றிய துணைச்செயலாளர் சி. மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.வடி வேல், முன்னாள் நிர்வாகிகள் சி.பழ னிச்சாமி, பன்னீர்செல்வம், நந்த கோபால், ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதே போல, அம்மாபாளையம் பகுதி யில் ஒன்றியத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றுது. இதில் கிளை நிர்வாகிகள் சங்கர், நாக ராஜ், முன்னாள் நிர்வாகிகள் காம ராஜ், பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டம், பெரியநா யக்கன்பாளையத்தில் வாலிபர் சங் கம் சார்பில், நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒன் றியச் செயலாளர் ந.ராஜா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார், ஒன்றியச் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வாலிபர் சங்கம் காளப்பட்டி கிளை சார்பில் பகத்சிங் நினைவு நாள் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி, எஸ் எஸ்குளம் கிழக்கு ஒன்றியச் செய லாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொருளா ளர் எஸ். பாரதி, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கே.எஸ்.கனகராஜ், எம். அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காளப்பட்டியில் நடைபெற்ற நினைவு தின நிகழ்விற்கு, வாலிபர் சங்க எஸ்.எஸ்.குளம் கிழக்கு இடைக்குழு செயலாளர் சந்திரசே கர் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கோபால்சங் கர், சிபிஎம் எஸ்.எஸ்.குளம் கிழக்கு இடைக்குழு செயலாளர் வெள்ளி யங்கிரி, சிஐடியு ஆட்டோ சங்கச் செயலாளர் ராஜ்கமல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.