திருப்பூர், அக்.17- திருப்பூர், எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் கல்லூரிப் பேரவை தொடக்க விழா செவ்வாயன்று நடை பெற்றது. கல்லூரி முதல்வர் மெய்.இரு.எழிலி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து க.செல்வராஜ் கல்லூரிக்கு புதிய நுழைவாயில் கட்ட ரூ.25 லட்சம் வழங்குவதாகவும், மாநகராட்சி மேயர். ந.தினேஷ்குமார் ஆய்வகத்திற்கு 50 கணிப்பொறிகள் வழங்க உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளர்ச்சி நிதியாக தலா ரூ.50ஆயிரம் வழங்கியவர்க ளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவியர் மன்ற பேரவைத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.அபிராமி, துணைத் தலைவி சு.சௌந்தர்யா, செயலாளர் செ.ரோஷினி, பொரு ளாளர் ரா.மோனா பியூலா, தமிழ்த்துறை விளையாட்டுத் துறை செயலாளர் வி.ரக்ஷிதா, நுண்கலை துறை செயலா ளர் வி.ஜோதிப்பிரீதா ஆகிய மாணவிகளுக்கு திருப்பூர் மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில், துணைமேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் உட்பட மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உயர் கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட கையெழுத்துப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது. கல்லூரிப் பேரவைத் தலைவர் மா.அபிராமி நன்றி கூறினார்.