districts

img

விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்

கோவை, ஜூன் 20- விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்திட வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க  கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தி  உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட 6 ஆவது மாநாடு அன் னூரில் ஞாயிறன்று மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கருப்பையா வரவேற்பு ரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் அன்னூர் தாலுகா செயலாளரும், அன்னூர் பேரூராட்சி 8 ஆவது வார்டு உறுப்பின ருமான  ஏ.முகமது முசீர், கரும்பு விவ சாய சங்க தலைவர் ஏ.ஆர்.சுப்பையன்,  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் ஆர்.செல்வராஜ் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற் றினர். இதில், விவசாய விளை பொருட் களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாரதியார் பல் கலைகழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி, இழப்பீடு வழங்க வேண்டும். குரும்பபாளையம் முதல் சத்தியமங் கலம் வரை மற்றும் கரூர் முதல் கோவை வரை புறவழிச்சாலை திட் டத்தை கைவிட வேண்டும். பால் மற்றும் கொப்பரைக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  வன விலங்குகளிடமிருந்து விவசாயிக ளையும், விளைபொருட்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு சட்டம் திருத் தம் செய்ய வேண்டும். உயர்மின் கோபு ரங்கள் செல்லும் பாதைக்கு வழங்கும்  இழப்பீட்டு தொகையை அதிகப்ப டுத்தி தர வேண்டும். விவசாய விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். நொய்யலாற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு 

மாநாட்டில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவராக வி.பி.இளங் கோவன், செயலாளராக வி.ஆர். பழனிச்சாமி, பொருளாளராக கே. தங்கவேல், துணைத்தலைவர்களாக ஏ.காளப்பன், பி.சங்கரன், துணைச் செயலாளர்களாக ஜே.ரவீந்திரன், ஸ்டாலின், பழனிச்சாமி உட்பட 19 பேர்  கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஓதிமலை யில் மாநாட்டு தீர்மானங்களை விளக்கி  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இம்மா நாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் பங் கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் பேசுகையில்,  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் அன்றைய கால கட்டத் தில் இலவச மின்சாரம் என்பது இருந் தது. கோவை மாவட்டத்தில் இவ்வ ளவு பஞ்சாலைகள் இருக்க காரணம் அன்றைய காலத்தில் விவசாயிகள் தங்களது மூலப்பொருளுக்கான ஆதார விலையை உருவாக்கியதே முக்கிய காரணம். தொழிலதிபர் ஒருவர், பண்ணாரி சர்க்கரை ஆலை மற்றும் சத்தியமங்க லத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள்  அமைத்தபோது, மறைந்த மத்திய அமைச்சர் பி.சுப்பிரமணியன் அவர்க ளுடன் இணைந்து காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் வசதிக்காக பெரிய நிதி ஒதுக்கி அந்த வாய்க்கால்  உருவாக்கப்பட்டது. 

பின்னர், விவசாயிகளுடன் ஒப்பந் தம் செய்து லட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டது. சர்க்கரை தொழிற்சாலையின் மூலப் பொருள் கரும்பு மற்றும் நீர் தேவையை பார்த்துக்கொண்டார். முத லாளி தனது லாபம் குறைய கூடாது  என்ற நோக்கத்தோடு செயல்படுகின்ற னர். அதேபோல், விவசாய தொழிலா ளர்களுக்கு கரும்பு ஆலை நிலுவைத் தொகை கேட்டு போராடுகிறபோது நாங்கள் விவசாயிகள் பக்கம்தான் நிற்கிறோம்.  நான் கடந்த முறை எம்.பி.,யாக இருந்தபோது தென்னை நல வாரியம் தலைமை அலுவலகம் என்பது கேரளா வில் மட்டும் இருந்தது. 2009 ஆம் ஆண்டு தென்னை நல வாரிய நிர்வா கம் மற்றும் அமைச்சரவையில் போராடி, 2011, 2012 ஆம் காலாண்டு களில் தான் தென்னை நல வாரியத்தின் துணை அலுவலகத்தை பொள்ளாச்சி யில் கொண்டு வந்தோம். நடைமுறை யில் உள்ள தென்னை சார் பொருட் களை ஊக்குவிக்க நாம் போராட வேண்டியுள்ளது. நமது மாநிலத்தில் உள்ள குளம், குட்டை மற்றும் ஏரிக ளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நாடு வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்கிற நோக்கம் சரியானது. ஆனால், ரயில் தடத்திற்கு, சாலை விரிவாக்கத்திற்கு, எண்ணெய் குழாய் பதிப்பிற்கு என அனைத்திற்கும் விவசாயிகளே தியா கம் செய்வது எந்த வகையிலும், நியாய மானதல்ல. கரூர்- கோயமுத்தூர் பைபாஸ் சாலை விரிவாக்கத்திற்கு 3000 ஏக்கர் செலவு செய்து, 6கி.மீ  தூரத்தை மிச்சப்படுத்தவது யாருக் கான லாபம். சுங்க கட்டணம் வசூலிப் பதே இவர்களது நோக்கம். தொண்டா முத்தூர் பகுதிகளில் இன்று நிலத்தடி நீர் என்பது அறவே இல்லை. நிலத்தடி நீர் என்பது அகல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதற்கு காரணம் ஈசா போன்ற அமைப்புகள் ஏற்படுத்திய நிர்பந்தம். இப்பகுதியில் விளையக் கூடிய விளை பொருட்களை தனக்கே விற்க வேண்டும் என்பதுதான். பாரதி யார் பல்கலைகழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை 40 ஆண்டுகள் கடந்து விட்டது. இதுவரை கொடுக்கப் படவில்லை தொடர்ந்து போராடி வரு கிறோம். பாரதியார் பல்கலை.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதி  கிடைக்கும்வரையில் போராடுவோம். விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தில் தொடர்ந்து இணைந்தி ருப்போம் என்றார். முன்னதாக இந்த  பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநில துணை தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர்.