கோவை, டிச.19- ஈரோடு களஆய்வு சுற்றுப்பயணத்திற்கு, வியாழனன்று கோவை விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல் மாவட்டமாக கோவை, மற் றும் அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். இந்நிலை யில், ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச் சர் ஈரோடு சென்று உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர் மற்றும் திமுக தொண்டர் கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் மு.க ஸ்டா லின் ஈரோடு சென்றார். அங்கு டிச.19 மற்றும் டிச-20 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக ளில் கலந்து கொள்ள உள்ளார்.