districts

img

மதுக்கடைகளில் கரூர் கம்பெனியின் அடாவடியான தலையீடு

கோவை, நவ.16– கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை மிரட்டி மாமூல் வேட்டை நடத்தும் கரூர் கம்பெனியின் அடாவடியை தடுத்து நிறுத்திட  தமிழக முதல்வர் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் ஆகியோர் தலை யிட வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.  இதுதொடர்பான கோரிக்கை மனுவினை  கோவை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதல்வர் உள்ளிட்ட துறை அமைச்சர் மற்றும்  அதிகாரிகளுக்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் ஆர்.வேலுசாமி  அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதா வது, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன மான டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 5300க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மாநிலம் முழு வதும் இயங்கி வருகின்றது. இதன் ஒரு பகு தியாக கோவை வடக்கு மாவட்டத்தில் 166  கடைகளும், கோவை தெற்கு மாவட்டத்தில் 139 கடைகளும் இயங்கி வருகிறது.  இந்நிலையில், கரூர் கம்பெனி என்கிற பெயரில் சிலர் தொடர்ந்து டாஸ்மாக் கடை களில், மதுக்கூடங்களில் அத்துமீறல் நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ் மாக் மதுபான கடைகளையொட்டிய மதுக் கூடங்களுக்கு 31.12.2021 அன்று புதிய ஏலம் கோரப்பட்டு 01.01.2022 முதல் புதிய மதுக்கூட உரிமம் வழங்கப்பட்டது. மேற்படி உரிமம் பெற்ற மதுக்கூட ஒப்பந்ததாரர்களில் சரிபாதியினர் மாதாந்திர வாடகையாக அர சுக்கு செலுத்த வேண்டிய 99 சதவிகிதம் உரி மத்தொகை மற்றும் டாஸ்மாக் நிறுவனத் திற்கு செலுத்த வேண்டிய ஒரு சதவிகித உரி மத்தொகையை செலுத்திடாமல் அரசுக்கும், நிறுவனத்திற்கும் பெறும் இழப்பை ஏற்ப டுத்தி வருகின்றனர். மேலும், கடைகளின்  விற்பனை அடிப்படையிலும், விற்பனையா கும் பாட்டில்கள் எண்ணிக்கை அடிப்படையி லும் தினசரி மாமூல் கொடுத்தாக வேண்டும் என ஊழியர்களை மிரட்டியும், அச்சுறுத்தி யும் வருகின்றனர்.

இதுதொடர்பாக சிஐடியு டாஸ்மாக் ஊழி யர்கள் மாநில சம்மேளனம் சார்பில் அக்.18  ஆம் தேதியன்று அன்று உரிய ஆதரவாளர் களுடன் காவல்துறை தலைமை இயக்குந  ருக்கு புகாரும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நி லையில் கோவை வடக்கு மாவட்டத்தில் செயல்படும் கடைகளுடன் இணைந்த 1610,  1721, 1516, 1532 மற்றும் கோவை தெற்கு  மாவட்டத்தில் 1840, 1837, 2254, 2288 உள் ளிட்ட கடைகளுடன் இணைந்து மதுக்கூடங் கள் பணம் செலுத்தாமல் நடத்தி அரசுக் கும், நிறுவனத்திற்கும் பெருமளவு நிதியி ழப்பு ஏற்படுத்தி வருவதோடு ஊழியர்களி டம் பணம் கேட்டு மிரட்டியும் வருகின்றனர். மேலும் கோவை மாவட்ட டாஸ்மாக் கடை களில் தினசரி விற்பனை அடிப்படையிலும், பாட்டில்களின் விற்பனை எண்ணிக்கை அடிப் படையிலும், தினசரி மாமூல் கேட்டு கொடுக் காத ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யும் அளவுக்கு இந்த கரூர் கம்பெனியினர் துணிந் துள்ளனர். இது தமிழக முதல்வரின் நல்லாட் சிக்கு ஒருபோதும் பெருமை சேர்க்காது. மாறாக அவபெயரையே ஏற்படுத்தும். மேலும், மேற்படி நபர்களால் கடை ஊழியர் களின் உயிருக்கும், உடைமைக்கும் ஏதே னும் அசம்பாவிதமோ, பணியிடத்தில் தொந்த ரவுகள் ஏற்படாமல் தடுப்பதோடு, அரசுக் கும் நிர்வாகத்திற்கும் செலுத்திட வேண்டிய உரிமத்தொகைகளை செலுத்திடாமல் ஏற்ப டும் வருவாய் இழப்புகளை தடுத்து நிறுத்திட உரிய சட்ட நடிவடிக்கை மேற்கொள்ள வேண் டும். 

மேலும், எப்.எல்.-2 மனமகிழ் மன்றங்க ளுக்கு இதுவரை 180 மி.லி. மது பாட்டில்கள் விற்பனைக்கு வழங்கப்படாத நிலையில், தற்போது 180மிலி மதுபாட்டில்கள் மதுபான கிடங்குகள் மூலம் வழங்கப்பட்டு வருகின் றது. இது டாஸ்மாக் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளுவதற்கான செயலாகவே கருத வேண்டி உள்ளது. 2003-ல் என்ன நோக்கத் திற்காக தனியார் செய்து வந்த மது விற்ப னையை தமிழக அரசு தடை செய்து, மது விற்பனையை தானே மேற்கொண்டதோ அந்த நோக்கங்களுக்கு எதிரானது. சட்டத்திற் கும், விதிகளுக்கும் மாறாக செயல்படும் எப்.எல். -2 மனமகிழ் மன்றங்களின் உரிமங் களை ரத்து செய்திட வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. முன்னதாக கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் திரளானோர் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம், கோரிக்கை மனுவை அளித்தனர்.