கோவை, ஆக.21- சின்னியம்பாளையம் ரிங் ரோடு, கோவை புறவழிச்சாலை திட்டத்தை விரைவுப் படுத்த வேண்டும் என சிஐடியு சாலை போக்குவரத்து மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு கோவை மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் 6ஆவது மாவட்ட மாநாடு கணபதி சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தில் செவ் வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.எம்.ரபீக் தலைமை ஏற்றார். பழனிச்சாமி மாநாட் டுக் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட் டில், வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை முன்வைக்கப்பட்டது. மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி, சாலை போக்கு வரத்து சம்மேளன துணைத் தலைவர் எஸ்.மூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.ரத்தினகுமார், துணைச் செயலாளர் எம்.கே.முத்து குமார் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில், தமிழ்நாடு அரசு 21 இருக் கைகள் கொண்ட கோச் வாகனத்திற்கு பெர்மிட் வழங்க வேண்டும். சக்திசாலை கணபதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். சின்னியம்பாளையம் ரிங் ரோடு திட்டத்தை விரைவு படுத்த வேண்டும், ஒன்றிய அரசு தொழிலாளர்க ளுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. இதில் சங்கத்தின் தலைவ ராக கே.மனோகரன், பொதுச்செய லாளராக ஏ.எம்.ரபீக், பொருளாளராக என்.கே.பாலுசாமி உள்ளிட்ட 53 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக் கப்பட்டது.