districts

img

நூல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 25- நூல் விலை உயர்வை கண் டித்து சிஐடியு சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத் தறி மற்றும் ஜவுளி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இத் தொழிலில் சுமார் 2 லட்சம் தொழிலா ளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  இத் தொழிலுக்கு மூலாதாரமாக விளங்கும் பஞ்சு மற்றும் நூல் விலை  வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருவதால் ஜவுளி தொழில்கள் செய்ய முடி யாமல் தறிபட்டறைகளை மூடி விட்டு தொழிலாளர்கள் பெரும் துய ரத்தை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தொழி லையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட ஒன்றிய அரசாங்கம் பருத்தி மற்றும் நூல்களை அத்தி யாவசிய பட்டியலில் சேர்க்க வேண் டும். பஞ்சு ஏற்றுமதியை தடுத்து நிறுத்த வேண்டும். பருத்தி நூல் பதுக்கலை தடுத்து நிறுத்திட வேண் டும்.  வேலையிலந்த தொழிலாளர் களின்  குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில்,  சிஐடியு மாவட்ட தலை வர் எம்.அசோகன், மாவட்ட செயலா ளர் ந.வேலுசாமி, பால் சங்க நிர்வாகி ஏ.ரங்கசாமி, சிஐடியு துணை செய லாளர்கள் கு.சிவராஜ், கே.மோகன், சு.சுரேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலா ளர் கே.தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.