திருப்பூர், டிச. 20 - டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பாக செவ்வாயன்று காலை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர் வாகி பி.பிரபாகரன் தலைமை வகித் தார். இதில் திருப்பூர் மாவட்ட சுமைப் பணித் தொழிலாளர் சங்கத்தின் செய லாளர் எம்.ராஜகோபால் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி னார். லிகர் மற்றும் பீர் பெட்டி ஒன்றுக்கு தலா ரூ.8, பெட்டிக்குள் பெட்டி ஒன் றுக்கு ரூ.9, கவர் இல்லாத பிரிமியர் பெட் டிக்கு ரூ.8, வெளிநாட்டு மதுபானப் பெட் டிக்கு ரூ.60, குடோன் விட்டு குடோன் மாற்றும்போது பெட்டி ஒன்றுக்கு ரூ.15 என இறக்குக் கூலியை தற்போதுள்ள நிலையில் இருந்து உயர்த்தி, காலதா மதம் இல்லாமல் வழங்க வேண்டும். அத் துடன் மாநிலம் முழுவதும் அனைத்து குடோன்களிலும் ஒரே மாதிரி நிரந் தரக் கூலி ரூ.3.50 வீதம் வழங்குவதற்கு ஒப்பந்ததாரர் டெண்டர் படிவத்திலேயே அறிவிக்க டாஸ்மாக் நிர்வாகம் தலை யிட வேண்டும். தொழிலாளர் இபிஎப் பணத்தை ஏற்கெனவே இருக்கும் எண் ணில் ஒரே மாதிரியாக செலுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப் பப்பட்டன. இதில் திருப்பூர் டாஸ்மாக் குடோ னில் வேலை செய்யும் 70க்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காங்கேயம் அதேபோல் டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காங் கேயத்தில் டாஸ்மாக் குடோன் முன்பாக செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு கைத்தறி சங்க நிர் வாகி கே.திருவேங்கடசாமி, தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.