ஈரோடு, மே 31- ஈரோடு மாநகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் பணியாளர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சிஐடியு சார்பில் மேயரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியி லுள்ள 1300 தூய்மை பணி யாளர்களில் 800 பேர் தற்காலிக, தினக்கூலி பணியாளர்கள் ஆவர். தூய்மை பணியாளர் கள், ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர்கள், கணிணி இயக்குபவர்கள், தரவு உள்ளீட்டா ளர்கள், டிபிசி பணியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்க ளில் 480 நாட்கள் பணிபுரிந்த அனைவரை யும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் தெரு விளக்குகளை பராமரிக்கும் பணி தனியா ருக்கு விடப்பட்டதை கைவிட்டு, மாநக ராட்சியே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், பொதுசெயலாளர் எஸ்.மாணிக்கம், பொருளாளர் ஏ.ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி மேயர் எஸ்.நாக ரத்தினத்திடம் பொதுசுகாதாரப் பணியாளர் கள் மனு அளித்தனர்.