districts

img

சிஐடியு மின் ஊழியர்கள் மறியல் - கைது

சேலம், பிப்.17- மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மேட்டூர் வட்டக் கிளை சார்பில் மேட்டூர்  பேருந்து நிலையம்  முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்றவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும், மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை இல்லை என பொய்யான அறிக்கை அளிப் பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மறியல் நடை பெற்றது. மேட்டூர் வட்டக்கிளை தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற மறியல்  போராட்டத்தில் செயலாளர் சுந்தரராஜன், சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.கருப்பண்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.