சேலம், டிச.5- ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை உடனடி யாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்த்தப்பட்ட வாகன வரியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். கொடுமையான ஆன் லைன் மூலம் அபராதம் விதிப் பதை கைவிட வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப் பின்படி ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தி, இணைய வழி (ஆப்: (App) உடனடியாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். வீடு இல்லாத மோட்டார் தொழிலாளர்க ளுக்கு வீடு அல்லது வீட்டுமனை வழங்க வேண்டும். ஆட்டோ தொழி லையும், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமை யில் ஆட்டோ ஓட்டுநர்கள், வாக னங்களில் மாடுகளை கட்டியும், கைகளில் சட்டி ஏந்தியும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் ஆட்டோ சங்க மாவட்டச் செய லாளர் உதயகுமார், மாவட்டப் பொருளாளர் மகாதேவன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, செய லாளர்கள் சீனிவாசன், மோகன் குமார், ஈஸ்வரன், மாவட்டப் பொரு ளாளர் மணிகண்டன் உட்பட 300க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பங்கேற்றனர்.