உடுமலை, டிச.27- உடுமலை தாலூகா, போடிபட்டி பகுதியில் புதிய சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க கிளை புதனன்று துவங்கபட்டது. இந்த விழாவிற்கு கிளைத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். தொழிற்சங்க செங்கொடியை விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஏற்றி வைத்தார். சங்கத்தின் பெயர் பலகையை மாவட்ட துணைத்தலைவர் அப்துல் மஜித் திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தண்டபாணி உட்பட ஆட்டோ சங்க கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.