உதகை, ஏப்.24- உதகை நகராட்சி தூய்மைப்ப ணியாளர்கள் ஓய்வு கால பணப் பயன்களை உரிய காலத்தில்வ ழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர தூய்மைப்பணியாளர்க ளுக்கு வழங்கும்ஊதியத்தை ஒப் பந்த தூய்மைப் பணியாளர்களுக் கும் வழங்க வேண்டும். பிரதி மாதம் 7 ஆம்தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தர தூய்மைப்பணி யாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய் மைப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, கையுறை, காலுறை உள்ளிட்ட தளவாட பொருட்களை முறையாகவழங்க வேண்டும். நிரந்தர தூய்மைப்பணியாளர் கள் ஓய்வுபெறும் தேதியில் வழங்க வேண்டிய ஓய்வு கால பணப் பயன் களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்படும் வாக னங்களை உரிய காலத்தில்பழுது நீக்க பணிகள்செய்து பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும். ஒப்பந்த தூய்மைப்பணியா ளர்களுக்கு வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகள்வழங்க வேண் டும். பிஎப் தொகையை முறையாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நக ராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை நகராட்சி அலுவலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு நகராட்சி ஊழியர் கள் சங்க செயலாளர் சி.சேகர் தலைமை ஏற்றார். இதில், சங்கத் தின் பொருளாளர் ஆர்.ரவிகுமார், சிஐடியு மாவட்ட தலைவர் சங்கர லிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன்சந்திரன் உள் ளிட்டோர் கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.