உதகை, ஜன.5- 4 வயது குழந்தை சிறுத்தை தாக்கி படுகாய மடைந்த நிலையில், சிறுத்தையை பிடிக்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டார பகு திகளில், சிறுத்தை ஒன்று வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரே நாளில் மூன்று பெண் களை தாக்கியுள்ளது. அதில் சரிதா என்ற பெண் சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வனத்துறையி னர் சிறுத்தையை பிடிப்பதற்கான, பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், வியாழனன்று மாலை கொளப்பள்ளி அருகே, சேவியர் மட்டம் என்ற இடத்தில், வீட்டிற்கு வெளியே தாயருடன், வந்த கீர்த்தனா என்ற நான்கு வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. இதையடுத்து தாயார் குழந்தையை இழுத்துக் கொண்டு வீட்டிற் குள் ஓடினார். இதில் படுகாயமடைந்த குழந்தை பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவதால், மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில், அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியல், கடைய டைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில், பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.