தருமபுரி, டிச.18- சிறுபான்மை நலக்குழு மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நகரகுழு சார்பில் கிறிஸ்துமஸ் விழா தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடை பெற்றது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வகையில், கிறிஸ்துமஸ் தாதா வேடம் அணிந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் கேக்வெட்டி பொதுமக்க ளுக்கு வழங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகர செயலாளர் எஸ். நிர்மலா ராணி தலைமை வகித்தார். சிறு பான்மை நலக்குழு துணைத் தலைவரும், முன்னாள் மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, சிறு பான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் டி.ஏசுதாஸ்,மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, நகர தலைவர் சுபா,பொருளாளர் உமா ராணி, நிர்வாகிகள் கே.பூபதி, மீனாட்சி, ராஜாமணி ஆகி யோர் பங்கேற்றனர்.