கோவை, அக்.15- கோவையில் சோழர் காலத்தை போல் தங்க நகை ஆபர ணங்கள் அறிமுகமாகி பெண்கள் மத்தி பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் குந்தவை மற்றும் நந்தினி வேடத்தில் நடித் துள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்காக இருவரும் அணிந் திருந்த உடைகள் மற்றும் நகைகள் பெண்களின் கவனத்தை ஈர்த்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சோழா கலெக்சன்ஸ் என்ற பெயரில் புதிய தங்க ஆபரணங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோழர் கால கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ஆகிய வற்றை பறைசாட்டும் விதமாக புதிய தங்க நகைகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக சோழர் கால ராஜ புரம், பிரகதீஸ்வரா, சோழர் கால நாணயங்கள், லக்ஷ்மி போன்ற டிசைன்களில் நெக்லஸ்கள், சோழர் கால கோபுரங்கள், புலி வாகனம், யானைகள், தூண்கள் ஆகிய டிசைன்களை கொண்ட கம்மல்கள் வளையல்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள இந்த நேரத்தில் இந்த சோழா கலெக்சன்கள் பெண்கள் மத்தி யில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.