திருப்பூர், டிச. 15 - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக ளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில் திருப்பூர் தெற்கு வட்டார அளவில் 79 அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு வட்டார அள வில் நடந்த கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி கலைய ரங்கத்தில் நடந்தது. இவ்விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) அமுதா தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங் கினார். மேலும் அதிக புள்ளிகள் எடுத்த ஜெய்வாபாய் பள்ளி அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையையும் வழங்கினார். ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 80 வகை பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு 43 போட்டிகளில் முதலிடத்தையும், 28 போட்டிகளில் 2 ஆம் இடத்தையும், 7 போட்டிகளில் 3 ஆம் இடத்தையும் என 78 போட்டிகளில் 200 க்கும் மேற் பட்ட ஜெய்வாபாய் பள்ளி மாணவி கள் அணியினர் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டிகளை பாபு, சுப்பிர மணி, ராஜேஷ், பூபாலன், அர்ஜு னன், சரவணன், முருகானந்தம், அக் பர் அலி ஆகியோர் கொண்ட ஆசி ரியர் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் களாக இருந்து நடத்தினர். முடிவில் திருப்பூர் தெற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அலிமா பீவி நன்றி கூறினார்.