districts

img

மின் பாதைக்கு இடையூறான மரக்கிளையை அகற்றிய ஊழியர் மீது வழக்கு: மின்வாரிய ஊழியர்கள் முற்றுகை

உடுமலை, நவ.14- மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளையை மின்வாரிய விதிப்படி அகற்றிய மின் ஊழியர் மீது  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதைக் கண் டித்து  வியாழனன்று உடுமலை மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். உடுமலை மின் வாரிய செயற்  பொறியாளர் அலுவலக வளாகத்தில்  காந்தி நகர் பிரிவு, நகரம் பிரிவு, கிராமி யம் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும்  தெற்கு என ஆறு பிரிவு அலுவலகங் கள் செயல்பட்டு வருகின்றன. பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்க ளுக்கு தடையில்லா மின்சாரம் வழங் கும் வகையில், மாதம் ஒரு முறை உயர் மின் பாதைக்கு இடையூறு ஏற் படுத்தும்படி இருக்கும் மரக்கிளை களை வெட்டும் பணி நடைபெறும்.  இதற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு  பராமரிப்பு பணிகள் செய்யப்படுகி றது. ஆனால் வீடுகளுக்கு மின்சாரம்  வழங்கும் மின் கம்பங்களை பராம ரிக்க, அப்பகுதியில் பணி செய்யும் மின் ஊழியார்கள் குறிப்பிட்ட பகுதி யில் மட்டும் மின் தடையை ஏற்ப டுத்தி, மரக்கிளைகளை அகற்றுவது,  மின் கம்பத்தில் சில பராமரிப்பு பணி கள் செய்வது வாரிய நடைமுறை யாக உள்ளது. இந்நிலையில் உடுமலை நகரப்பி ரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட செல் லம் குடியிருப்பு பகுதி இந்து நகரில்,  கடந்த பத்து நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக மின் தடை ஏற்பட்டுள் ளது. பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் புகாரின் பெயரில் இந்து நகர் பகுதியில் இருக்கும் மின்  பாதைகளை ஆய்வு செய்த ஊழியர் கள், தனியார் வீட்டில் இருந்த மரத் தின் கிளைகள் மின் கம்பிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதை  கண்டுபிடித்தனர். இதையடுத்து மரக் கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், பொது மக்களின் நலன் கருதி இடை யூறாக இருந்த மரக் கிளைகளை அகற்றி உள்ளார்கள்.  மின் வாரிய விதிகளின்படி மின்  பாதைக்கு இடையூறாக இருந்த மரக் கிளையை அகற்றிய மின் வாரிய ஊழி யர் (கேங் மேன்) மீது வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதைய டுத்து அவர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, மின் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி உடுமலை மின் வாரிய அலுவலகத்தின் முன்பு மின்  ஊழியர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து மின் ஊழியர்கள் தெரிவிக்கையில், தடையில்லா மின் சாரம் வழங்கவும், மின் கம்பங்களை பாதுகாக்கும் வகையில் மின் வாரி யத்தின் சட்ட விதிகளின்படி மரங்க ளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா மல் கிளைகளை மட்டுமே அகற்றப்ப டுகிறது. மேலும் மின் வாரியத்தில் பரா மரிப்பு மற்றும் மின் பழுது நீக்க அனைத்து வேலைகளையும் குறை வான ஊழியர்களை வைத்துக் கொண்டு செய்து வருகிறோம். கடு மையான இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்திலும், ஓய்வு இல்லாமல் வேலை செய்யும் ஊழியர்கள் மீது  வழக்கு பதிவு செய்துள்ளதை ரத்து   செய்ய வேண்டும். மின் வாரிய ஊழி யர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது அரசு ஊழியரை வேலை  செய்ய விடாமல் தடுத்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, மின் வாரிய  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றார்கள். தனிநபர் கொடுத்த புகார் குறித்து  ஆய்வு செய்யாமல் மின்வாரிய ஊழி யர் மீது உடுமலை காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்ததுதான் இப் பிரச்சனைக்கு காரணம். அரசுப் பணி  செய்யும் கடைநிலை ஊழியரைப் பாதுகாக்க வேண்டியது அந்த துறை யின் பொறுப்பு. இந்த வழக்கை ரத்து  செய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் ஊழியர்கள் கூறினர்.