districts

மத மோதலை தூண்டிவிடும் வகையில் பேச்சு பாஜக அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு

சேலம், அக்.30- இரு மதத்தினரிடையே மோதலை தூண்டிவிடும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக பாஜக தலை வர் அண்ணாமலை மீது சேலம் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பியூஷ் மானுஷ். சமூக ஆா்வலரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அப்புகார் மனுவில், ‘தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என கிறிஸ்தவ மிஷ னரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற் றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே இரு மதத்தினரிடையே மோதலை ஏற்ப டுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ள தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனால், காவல் துறை இந்த  வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில், சேலம் நான்கா வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதேநேரத்தில் தமிழ் நாடு அரசின் அனுமதியைப் பெற வேண் டும்’ எனவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர்  செ.கார்மேகம் மூலம் இந்த மனு தமி ழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. இந்த மனு மீதான அரசு வழக்குரை ஞர்களின் பரிசீலனையின்பேரில், வழக்குப்பதிவு செய்து அக்.18 ஆம் தேதி யன்று விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த வழக்கு நவ.4 ஆம் தேதியன்று சேலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதைத்தொ டர்ந்து  தமிழக பாஜக தலைவர் அண்ணா மலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசா ரணை தொடங்கவுள்ளதாகக் கூறப்படு கிறது.