districts

img

விதிமீறல் கண்டறியப்பட்டால் பட்டாசு கடை அனுமதி ரத்து

சேலம், அக்.8- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கடையின் அனுமதி ரத்து செய்யப்படும் என சேலம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத் துள்ளார். பட்டாசு விற்பனைக் கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமை வகித் தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் நகர்புறங்களில் 170 பட்டாசு கடைகளுக்கும், ஊரகப் பகு திகளில் 470 பட்டாசு கடைகளுக்கும் இது வரை தற்காலிக அனுமதி கேட்டு விண் ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற் பனைக் கடைகள் அமைப்பதைப் போன்று, சேலம் மாவட்டத்தில் பொது மக்களின் குடியிருப்புகள் அதிகம் இல் லாத பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. பட்டாசுக் கடை களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு வைக் கப்பட்டிருந்தாலோ, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த  பட்டாசுக் கடையின் அனுமதியை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் பாதுகாப் பான முறையில் பட்டாசு வெடிப்பதன் அவசியம் குறித்தும் அதிகமான பட்டாசு ஒலியால் முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு இடையூறு இல்லாத வகையிலும், இதுகுறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது, என்றார். முன்னதாக, இக்கூட் டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கேஅருண்கபிலன், மாவட்ட வரு வாய் அலுவலர் பெ.மேனகா, துணை  காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.