districts

img

நீட், கியூட் போன்ற தேர்வுகளை ரத்து செய்திடுக

கோவை, மார்ச் 19- மாணவர்களை பாதிக்கும் நீட், கியூட் தேர்வுகளை ரத்து செய்ய வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட சிறப்பு பேரவை கூட் டம், மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கயல்விழி தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தை துவக்கி வைத்து மாநில துணைத்தலைவர் சம் சீர் அகமது உரையாற்றினார். சங்கத் தின் கொடியினை மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ் ஏற்றி வைத்தார். செயற்குழு உறுப்பினர் ரமேஷ் கண் ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் அசாருதீன் எதிர்காலப் பணி கள் குறித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் நீட், கியூட் ஆகிய  நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண் டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இல வச நாப்கின் வழங்குவதை அரசு உறுதிப் படுத்த வேண்டும். அனைத்து பள்ளி, கல் லூரிகளிலும் பெண்களுக்கான கழி வறை வசதிகளை உறுதிப்படுத்த வேண் டும். புதிதாக துவங்கப்பட்ட அரசு உறுப்பு கலை கல்லூரிகளை விரிவுப டுத்தி, ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். பொள்ளாச்சி பகுதியில் புதிதாக அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல் லூரிகளை துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராக ரமேஷ்  கண்ணன், துணைச்செயலாளராக சந் தோஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். முடிவில், மாநிலச் செயலா ளர் நிரூபன் சக்கரவர்த்தி மாநாட்டை நிறைவுரையாற்றினார். துணைத்தலை வர் சந்தியா நன்றி கூறினார்.