திருப்பூர் ஜூலை 19- இந்தியாவில் உழைக்கும் மக்கள் உரிமைகளை பறித்து நாட்டை நாசமாக் கும் மோடி அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயி களின் நலனுக்கு எதிரான நடவடிக்கை களை கண்டித்தும், மக்களை தாக்கும் மோடி அரசை ஆட்சி அதிகாரத்தி லிருந்து அகற்றுவோம் என்ற முழக்கத் தோடும் இந்த இயக்கம் நடத்தப்பட் டது. தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை அமல்படுத்தாமல் திரும்பப் பெறு, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் ஆக நிர்ணயம் செய், ஓய்வூதி யத்தை குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் கொடு, பொதுத்துறையை தனியா ருக்கு தாரை வார்க்காதே, வேளாண் விலை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கு, அநியாய அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெறு,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, கல்வி, மருத்துவம், பாது காக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் சமமாக கிடைத்திட உறுதி செய், அமைப் புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு தேவை யான நிதி ஒதுக்கீடு செய் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தொடர் பிரச்சார இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் திருப்பூரில் புதனன்று முதல் நாள் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத் தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி. மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜி.சம் பத், ஏஐடியுசி நிர்வாகிகள் எம்.மோகன், ஜி.ரவி, எல்.பி.எப் துணைத்தலைவர் ஆர்.ரங்கசாமி, மகேஷ், ஐஎன்டியுசி செயலாளர் ஏ.சிவசாமி, டி.வி மகுடபதி, எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் ஆர். முத்துசாமி, ஏ.மணி, எம்எல்எப் சார்பில் மு.மனோகரன், பாண்டியராஜ் உள் ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். முதல் நாள் பிரச்சார இயக்கம் பெருமாநல்லூரில் தொடங்கி திருப்பூ ரின் வடக்கு பகுதியில் பல்வேறு இடங் களில் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகே நிறைவடைந் தது. இரண்டாவது நாள் தொழிற்சங்கங் களின் பிரச்சார இயக்கம் முதலி பாளை யத்தில் தொடங்கி திருப்பூரின் தென் பகுதியில் பல்வேறு இடங்களில் பிரச் சாரம் செய்யப்படுகிறது.