கோவை, செப். 27- வாகனங்கள் செல்லுவதற்கே லாயக்கற்ற குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தனர். கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் முகாமில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு சார்பில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, சௌரி பாளையம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இந்த சாலையின் பெரும்பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இவ்வழியே பய ணிப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, புலியகுளத்தில் இருந்து மீனா எஸ்டேட் வரை செல்லும் சாலை வாகனங்கள் செல்வதற்கே லாயக்கற்ற தாக உள்ளது. இப்பகுதியில் நாள்தோறும் விபத்துகள் ஏற்படு கிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் அன்றாட நிகழ்வாக உள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடி யாமல் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடி யாக மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் தலைமையில் மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் மனு அளித்தனர்.