districts

img

ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க கோரி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர் சங்கத்தினர் தர்ணா

சேலம், ஜூன் 21- ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வழங்க வேண் டிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம், தருமபுரி யில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற் றும் ஊழியர்கள் சங்கத்தின் சார் பில் தர்ணா போராட்டம் நடைபெற் றது. ஒன்றிய அரசு, தனியாருக்கு பல சலுகைகளை வழங்கி விட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு குறைந்த அளவிலான சலுகை களை அறிவித்து வருகிறது. குறிப் பாக தனியார் மயத்தை நோக்கிய  ஒன்றிய மோடி அரசின் செயல்பாடு உள்ளது என ஊழியர்களும், அதி காரிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை வழங்கக்கூடிய இந்த தருணத்தில், 4ஜி அலைக் கற்றை கூட பிஎஸ்என்எல் நிறுவ னத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்க வில்லை. ஒன்றிய அரசு பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு உரிய சலு கைகளை வழங்கினால் மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் முதலிடத்தில் விளங் கும்.  பிஎஸ்என்எல் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஓய்வூதிய பலன்களை அமு லாக்க வேண்டும். கருணை அடிப் படையிலான பணி நியமனத்திற் கான தடையை நீக்க வேண்டும்.  எஸ்சி,எஸ்டி காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். களப்பணி களின் அடிப்படையில் இலகா தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, சேலம் மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன்பு, பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில்  தர்ணா போராட்டம் நடைபெற்றது.      இந்த தர்ணா போராட்டத்தில், பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத் தின் அகில இந்திய துணைத் தலை வர் சேகர், பிஎஸ்என்எல் எம்ப்ளா யீஸ் யூனியன் மாநில செயற்குழு  உறுப்பினர் ஹரிகரன், மாவட்ட செயலாளர் கோபால், சீனிவாசன், ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் செல்வம், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற  ஊழி யர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.தமிழ் மணி, பிஎஸ்என்எல் பொறியாளர் கள் சங்கத்தின் நிர்வாகி மணிக் குமார், பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் பொருளாளர் சண்மு கம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு ஏயூஏபி தலைவர் கே.மணி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செய லாளர் எம்.நாராயணசாமி போராட் டத்தை துவக்கிவைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் எம்.பாபு, மாவட்ட செயலாளர் பி.கிருஷ் ணன், எஸ்என்இஏ மாநில பொரு ளாளர் கிஷோர் குமார் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.

ஈரோடு

ஈரோடு பொதுமேலாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு என்எப்டிஇ தலை வர் ஆர்.செங்கோட்டையன் தலைமை வகித்தார். இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட  செயலாளர் எஸ்.பாலு, எஸ்என் இஏ மாவட்ட செயலாளர் ஆர்.சரவ ணமூர்த்தி, சேவா மாவட்ட செய லாளர் எம்.அருண்குமார், ஏஐஜி இடிஒஏ பாலகிருஷ்ணன், ஏஐபி எஸ்என்எல்இஏ சதீஸ்பாபு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஈரோடு நாடாளுமன்ற  உறுப்பினர் அ.கணேசமூர்த்தியி டம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்கத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.