திருப்பூர், மார்ச் 7 – பிஎஸ்என்எல் நிர்வாகம் பஞ்சாப் மாநிலத்தில் ஜே.டி.ஓ தேர்வுகளை ரத்து செய்ததைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக புதன் கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளர் சங்கிலிதுரை தலைமை ஏற்றார். பஞ்சாப் மாநிலத் தில் ஜேடிஓ தேர்வை ரத்து செய்ததைக் கண்டித்தும், பஞ்சாப் மாநில பிஎஸ்என்எல் முதன்மை நிர்வாக இயக்குநரின் ஆண வப் போக்கைக் கண்டித்தும், உடனடியாக தேர்வை நடத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட் டன. கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் என்.குமரவேல், மாநில உதவிச் செயலாளர் பொலி செட்டி ரமேஷ் ஆகியோர் உரையாற்றி னர், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கிளைச் செயலாளர் விஸ் வநாதன் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில உதவிச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.