திருப்பூர், பிப்.24- பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஐடிஏ நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூ ரில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை நிர் வாகிகள் ராஜராஜன், ராதாகிருஷ்ணன் ஆகி யோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்பாட் டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் என்.சக்திவேல் கோரிக்கையை விளக்கிப் பேசினார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், விஸ்வநா தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர் பாட்டத்தை கிளைச் செயலாளர் சங்கிலி துரை நன்றி கூறி முடித்து வைத்தார்.