districts

img

4ஜி, 5ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 23 - பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5  ஜி சேவைகள் வழங்க மத்திய அரசு அனு மதி வழங்க வேண்டும் என்று பிஎஸ்என் எல் ஊழியர் சங்கங்களின் மாநாடு வலியு றுத்தி உள்ளது. திருப்பூர் பிஎஸ்என்எல் ஊழியர்  சங் கத்தின் இணைந்த  10ஆவது கிளைகள்  மாநாடு வியாழனன்று திருப்பூர் மெயின்  தொலைபேசி நிலையத்தில் நடைபெற் றது. கிளை தலைவர் கே. ராதாகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிளைப் பொருளாளர்  டி.பி.ஜானகி தேசிய கொடியையும், கிளைச் செயலாளர் என்.குமரவேலு  சங்கக்கொடியையும் ஏற்றினர். மாவட்ட  செயலாளர் எஸ்.மகேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் பி.ராஜு  சிறப்புரை ஆற்றினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்  வாழ்த்தி பேசினார். இதில், பிஎஸ்என் எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி  சேவையை வழங்க வேண்டும். ஊழியர் களுக்கு ஊதிய மாற்றம், ஓய்வூதியர்க ளுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண் டும். ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை கள் உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதைதொடர்ந்து, நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் வீரக்குமார், சஜி ஜோசப், ரமேஷ், ஜெ.அருண்குமார், ஆகியோர் பேசினர். இதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொன் னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டனர்.  இதில், பிஎஸ்என்எல், எஐபிடிபிஎ டிஎண்டிசிடபிள்யூ சங்கங்களின் மாநில,  மாவட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், எ.மாலதி நன்றி கூறினார்.