districts

காலை சிற்றுண்டித் திட்டம்: 41,330 பேர் பயன்

நாமக்கல், டிச.14- நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 842 பள்ளிகளில் 41,330 மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட் டிலுள்ள உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை  உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் முதல் கட்ட மாக கொல்லிமலை வட்டாரத்தில் 41 பள்ளி களில் பயிலும் 1,588 மாணவ, மாணவி களுக்கும், நாமக்கல் நகராட்சியில் உள்ள 17 பள்ளிகளில் பயிலும் 2,205 மாணவ, மாணவி களுக்கும், திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 12 பள்ளிகளில் பயிலும் 1,792 மாணவ,  மாணவிகளுக்கும் என மொத்தம் 70 பள்ளி களில் பயிலும் 5,585 மாணவ, மாணவிக ளுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும்  வகையில் காலை உணவுத்திட்டம் கடந்த  ஆக.25 ஆம் தேதியன்று விரிவுபடுத்தப்பட் டது. நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்க ளில் உள்ள 714 பள்ளிகளில் பயிலும் 28,864  மாணவ, மாணவிகள், 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் பயிலும் 3,804 மாணவ,  மாணவிகள், 5 நகராட்சி மற்றும் 4 பேரூராட்சி களில் உள்ள 69 பள்ளிகளில் பயிலும் 8,662  மாணவ, மாணவிகள் என மொத்தம் 842 பள்ளி களில் பயிலும் 41,330 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட் டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.