கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் பாதிக்கப்படவில்லை - இரா.முத்தரசன்
கோவை, ஜன. 4- பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோவையில் தெரிவித்துள் ளார். கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து செய்தி யாளர்களிடம் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அவர்கள் திடீரென்று எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் அறிவித்தார். நாட்டையும், நாட்டு மக்களை யும், அரசாங்கத்தையும் ஏமாற்றி பதுக்கி வைத்திருக்கிற கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வருவது, ஊழலை கட்டுப்படுத்த, கள்ள நோட்டுகளை தடுக்க, பயங்கரவாதி களுக்கு செல்லுகின்ற நிதி உதவிகளை தடுத்து நிறுத்த என்று விளக்கம் கொடுத் தார். அந்த நோக்கம் நிறைவேறியதா? என் றால் இல்லை. கருப்பு பணம் ஒரு ரூபாய் கூட பிடிபடவில்லை. ரிசர்வ் வங்கியில் இருந்து அச்சிடப்பட்ட அனைத்து நோட்டு களும் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு வந்து விட்டது.
செல்லாது என்று அறிவித்தது கருப்பு பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவி இருக் கிறது. கள்ள நோட்டு இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. கோடி கோடியாக கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை. அதே நேரத்தில் சாதாரண ஏழை , எளிய மக்கள், சிறு, குறு தொழில் செய்யக் கூடியவர்கள், வணிகர்கள் இவர்கள்தான் மிகப்பெரும் அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளா னார்கள். பல பேர் உயிரிழந்தார்கள். பல பேர் நாட் கணக்கில் வரிசைகள் நின்று மயங்கி கீழே விழுந்தார்கள். வங்கி ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமைப்பு விசாரித்து ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நான்கு பேர் அரசாங்கத்திற்கு சாதகமான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்கள். ஒரு வர் நாகரத்தினம் மிகக் கடுமையாக ஆட்சே பனை செய்திருக்கிறார். நான்கு நீதிபதிகள் ஒன்றிய அரசாங் கத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவா பிரச் சனை ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்ட பலன் என்ன? நோக்கம் நிறைவேறியதா ? எள் முனையளவு கூட நோக்கம் நிறைவேறவில்லை, என்றார்.
ஆப்ரிக்கா பன்றி காய்ச்சல்: காட்டுப் பன்றிகள் பலி
உதகை, ஜன. 4- ஆப்பரிக்கா பன்றி காய்ச் சல் தாக்கி 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குரும்பர் பாடி, தெப்பக்காடு உள்ளிட்ட இடங் களில் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றி வருகின்றன. இந்நிலையில், கடந்த டிச.25 ஆம் தேதி முதல் காட்டுப் பன்றிகள் திடீர் திடீரென இறக்க ஆரம்பித்தன. முது மலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் உடலை பிரேத செய்து பார்த்த போது உட்பகுதியில் ரத்தக்கசிவு இருந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் இந்த காய்ச்ச லால் இறந்துள்ளன. வனத் துறையினர் தினந்தோறும் காட்டுப்பன்றிகளை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதே போன்று கர்நாடக மாநிலத் தின் பண்டிப்பூர் தேசியப் பூங்காவில் இதுபோன்று 25க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் இறந்துள்ளன. இது ஆப்பரிக்க பன்றி காய்ச் சல் தாக்கி இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் கூறுகையில், இந்தியாவில் முதன் முதலாக ஆப்ரிக்கா பன்றி காய்ச்சல் அஸ்ஸாம் போன்ற வட மாநிலங்களில் தான் இருந்தது. அதன்பிறகு கர்நாடக, கேரளாவில் பரவி யுள்ளது. இந்த காய்ச்சல் தாக் கிய பன்றிகளுக்கு வெளிப் படையாக எந்த அறிகுறியும் தெரியாது. உள் உறுப்புக ளில் ரத்த கசிவு ஏற்பட்டிருக் கும். இதற்கு சிகிச்சையோ மருந்துகளோ கிடையாது இந்த காய்ச்சல் பன்றிக ளுக்கு மட்டுமே பரவும் மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாது குடியிருப்புகளை ஒட்டியுள்ள பன்றிகள் மட் டுமே இறந்துள்ளன. என்றார்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜன.4 - கொரோனா சிகிச்சைக்காக பணிய மர்த்தப்பட்ட செவிலியர்களை பணி பாது காப்புடன் நிரந்தரத் தன்மை உள்ள பணியி டத்தில் நியமிக்க வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவி இறப்பு விகிதம் அதிகமாக இருந்த சூழலில் 2020ஆம் ஆண்டு மே மாதம் சுமார் 2400 செவிலியர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்தது. இவர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த வர்கள் ஆவர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் உயிரை துச்சமென நினைத்து பணி யாற்றிய செவிலியர்களை தற்போது பணி நீக்கம் செய்ய அரசாணை வெளியிட்டி ருப்பது மிகவும் வேதனைக்குரியது. இவர் களை மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் தற் காலிக பணியாளர்களாக பணி அமர்த்த அரசு உத்தரவிட்டிருப்பது முதல்வரின் உறுதி மொழிக்கு எதிரானதாகும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2500 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தாமல், தற்காலிக பணியில் அமர்த்து வது அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த செவிலியர் களை பணி நிரந்தரம் உள்ள பணியிடங் களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து செவிலி யர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீனா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயராணி வரவேற் றார். மாநில இணைச் செயலாளர் பெஜாக்சின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட இணைச் செயலாளர் ராமன், விஎச்என் மாவட்டத் தலைவர் அன்னம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் விமலா நன்றி கூறினார்.
ஊராட்சி பணியாளர்கள் ஊதியத்தை நிர்ணயம் செய்திடுக
மாவட்ட ஆட்சியருக்கு சிஐடியு கோரிக்கை
திருப்பூர், ஜன.4- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி களில் வேலை செய்யும் தூய்மை பணியா ளர்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்கு பவர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பி.பழனிச்சாமி மற்றும் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர், செவ்வாயன்று ஆட்சியர் சு.வினீத்திடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளின் தூய்மை பணியாளர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு செப். 14ஆம் தேதிக்கு முன்பு பணிய மர்த்தப்பட்ட தூய்மை பணியாளர்களின் காலமுறை ஊதியம் குறித்தும், கடந்த 2000- ஆம் ஆண்டு மே 10ஆம் தேதிக்கு பின்னர் பணி செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் ஊதிய நிர்ணயம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செப். 27ஆம் தேதி அறிவித்த குறிப்பா ணைகள் இதுவரை அமல்படுத்தப்பட வில்லை. எனவே, மேற்கண்ட குறிப்பாணைகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்கும் ஆபரேட்டர்கள், தூய்மைப் பணி யாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அக விலைப் படிகளை முறையாக கணக்கிட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் பருப்புகள் ஏலம்
திருப்பூர், ஜன.4- திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்புகள் ஏலம் திங்களன்று நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு காங் கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 விவ சாயிகள் 320 கிலோ தேங்காய் பருப்பினை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காங்கயம், வெள்ளக் கோவில் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்தி ருந்தனர். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ. 81க்கும், குறைந்தபட்சமாக ரூ.60க்கும், சராசரியாக ரூ. 71க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.25 ஆயிரத் துக்கு விற்பனை நடை பெற்றது.
தம்பியை கொலை செய்த அண்ணன்
பொள்ளாச்சி, ஜன.4- பொள்ளாச்சியை அடுத் துள்ள கிணத்துக்கடவு அருகே வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (42) இவரது அண்ணன் மகாலிங்கம் இரு வரும் அண்ணன் தம்பிகள். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாய் தேங் காய் வியாபாரம் செய்து வந் தனர். வியாபாரத்தில் நட் டம் ஏற்பட்டதால், இருவருக் கும் இடையே தகராறு ஏற் பட்டுள்ளது. இதில், ஆத்திர மடைந்த மகாலிங்கம் கத்தி எடுத்து தம்பி ஆறுசாமியை குத்தி விட்டு தலைமறைவா னதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்தில் ஆறுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரியில் பிரதமர் மோடி மண்ணை கவ்வுவார் அண்ணாமலை உளறலுக்கு செந்தில்குமார் எம்.பி., விளாசல்
தருமபுரி, ஜன.4- வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரத மர் மோடி தருமபுரி தொகுதியில் போட்டி யிட்டால், அவரை தோற்கடித்த பெரு மையை திமுகவிற்கு வழங்குவோம் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். தருமபுரியில் ஜன.2 ஆம் தேதியன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உளறி னார். இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த நகராட்சி தேர்தலில் தருமபுரியில் 14 வார்டுகளில் பாஜக போட்டியிட்டு மொத்த மாக வெறும் 352 வாக்குகளும், தமிழக பாஜக விற்கு அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினர் தருமபுரி மாவட்டத் தில் மொத்தம் 59 இடங்களில் போடியிட்டு மொத்தம் 1082 வாக்குகளையே பெற்றுள் ளார்கள். தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் தமிழகத்தில் போட்டி யிட போவதாக நாளிதழ்களில் செய்தி வந்துள் ளது. அப்படி அவர் (மோடி) தருமபுரி தொகு தியில் போட்டியிட்டால் திமுக சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் பிரதமரை தோற் கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்கு வோம், அண்ணாமலை தருமபுரி மாவட்டத் தில் தேர்தலில் நின்றால் டெபாசிட் இழக்க செய்வோம், என்றார்.