ஈரோடு, பிப். 24- ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் பட்டிய லின இளைஞர் மீதும் அவரது குடும்பத்தி னர் மீதும் நண்பர்களுடன் சென்று தாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூ ராட்சி, குள்ளரங்கன்பாளையத்தைச் சேர்ந்த பட்டியியலின கல்லூரி மாணவர் ரமணிசந்தி ரன் கழிவு நீர் கால்வாய் அடைப்பு பற்றி செல் போன் மூலம் புகார் தெரிவித்துள்ளார். புகார் குறித்த செல்போன் அழைப்பினை வார்டு உறுப்பினரான பாஜக நிர்வாகி கவின்குமா ரின் மனைவி எடுத்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த கவின்குமார் நண்பர்களுடன் சென்று ரமணிச்சந்திரன் மற்றும் அவரது தாயார் கோகிலாவை முரட்டுத்தனமாகத் தாக்கியுள்ளனர். சாதியைச் சொல்லி மிரட்டி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ரமணி சந்திரன் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அரச்சலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள் ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் மா.அண்ணா துரை மற்றும் என்.பாலசுப்பிரமணியம் ஆகி யோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோகிலாவைச் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், உடனடியாக காவல்துறை சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தினர். இதனைத்தொடர்ந்து, அரச்சலூர் பேரூ ராட்சியில் ஆறாவது வார்டில் சுயேட்சை யாக நின்று வென்று பாஜகவில் இணைந்து ஒன்றிய இளைஞரணி பொறுப்பேற்ற கவின் குமார் தனது நண்பர்கள் பிரபு, குமார், மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரை அரச்சலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.