நாமக்கல், ஜூன் 29- பத்து ரூபாய் நாணயம் குறித்த அச்சத்தை போக்க நாமக்கல் அருகில் உணவக உரிமை யாளர் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளை யத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் பள்ளிபாளையம் அக்ரஹாரம் அருகே வியாழனன்று புதிதாக பிரியாணி உணவ கத்தினை திறந்தார். இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான பொது மக்கள் பயன்படுத்துவதில்லை. மேலும் வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள். எனவே, 10 ரூபாய் நாணயத்தை பொது மக்கள் பரவலாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பத்து ரூபாய் நாணயம் பயன்பாடு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஐந்து 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து கொடுத்தால், ஒரு பிரியாணி வழங்கப் படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொது மக்கள் தங்கள் கைவசம் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்து பிரியாணி வாங்கி செல்கின்றனர்.