districts

img

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாமக்கல், ஜூலை 27- பள்ளிபாளையம் பகுதியில் காவேரி ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து  வரும் கனமழை காரணமாக, கர்நாடகா மாநிலத்தி லுள்ள அணைகள் முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணை களில் இருந்து விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்  அணைக்கு விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் தற்போது  வந்து கொண்டுள்ளதால், தற்போது 100 அடி எட்டியுள் ளது. இன்னும் சில தினங்களில் அணையின் முழு கொள் ளளவான 120 அடி நிரம்பும் என நீர்வளத்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளதை முன் னிட்டு, ஞாயிறன்று (இன்று) மேட்டூர் அணையிலிருந்து பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட உள் ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் வழியாக பாயும் காவிரியாற்றின் கரையோ ரம் வசிக்கும் ஜனதா நகர், மீனவர் தெரு, நாட்டான் கவுண்டன் புதூர் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறி விக்கப்பட்டுள்ளது. மேலும், வீடு வீடாக சென்று நகராட்சி ஊழியர்கள், தாழ்வான பகுதியில் வசிப்போர், மேடான பகுதிக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.