தாராபுரம், ஏப்.13– தாராபுரத்தில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய பேர ணியை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குமார் சர வணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி சர்ச்ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, அண்ணா சிலையை அடைந்தது. அங்கு பொதுமக்கள் முன்னிலை யில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குமார் சரவணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையை தவிர்க்கவும், உரிய நேரத்தில் நீதி கிடைக்கவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு களில் எளிதாக தீர்வு காணவும் லோக் அதலாத் என்று அழைக் கப்படும் சமரச மக்கள் நீதிமன்றம் பொதுமக்களுக்கு எளி தில் தீர்வு காண உதவுகிறது. இதுகுறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப் புணர்வு பேரணி அமையும் என நீதிபதி பேசினார். முன்னதாக, தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நீதி பதிகள் குமார் சரவணன், வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் எம். தர்மபிரபு, குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி ஆக்னஸ் ஜெப கிருபா ஆகி யோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிர சுரங்களை நீதிமன்ற பணியாளர்கள் மூலம் வழங்கினர். திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் சமரச மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்கு களுக்குத் தீர்வு காண்பது குறித்த காணொலி காட்சி வாகன திரை மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இதில், சமரச மைய உறுப் பினர்கள் வழக்கறிஞர்கள் எஸ்.கே.கார்வேந்தன், ராஜ கோபால், சேகர் நீதிமன்ற அலுவலர்கள், பிஷ்சப்தார் கல் லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.