சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மாவட்டத்தைப் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்குப் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள 10 கல்லூரிகள் மற்றும் 06 பள்ளிகளில் பயிலும் 1445 மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இளைய சமூகத்தினர் மற்றும் பொதுமக்களுக்குப் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம்களும், விழிப்புணர்வு பேரணிகளும் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.