நாமக்கல், செப்.22- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு அலுவலர்களுக்கான வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கோவை வட்ட வருமான வரி துணை ஆணையர் எஸ்.பாரதி, சேலம் டிடிஎஸ் வார்டு வருமான வரி அதிகாரி எஸ்.கணபதிசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப் படும் சம்பள பட்டுவாடா மற்றும் ஒப்பந்த செலவினங்களில் மேற்கொள்ள வேண்டிய வருமான வரி பிடித்தம் (TDS), காலாண்டு e-TDS (வருமானம் உருவாகும் வளங்களில் வரி பிடித்தம்) ரிட்டன் தாக்கல் மற்றும் அது தொடர்பான, அபராதம் மற்றும் தாமத கட்டணங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்து ரைத்து அலுவலர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் ஆ.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவசுப்ரமணியன், நேர்முக உதவி யாளர் (கணக்கு) நந்தகுமார், வருமான வரித்துறை அலுவ லர்கள், அலுவலர்கள் மற்றும் கணக்கர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.