கோவை, ஏப்.17- இந்தியாவில் பாம்புக்கடி குறித்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 7 கோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளதாக பாம்புக்கடி ஆராய்ச்சி யாளரும், லண்டனில் உள்ள ரெடிங் பல்கலைகழக பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி தெரிவித்துள் ளார். கோவை பத்திரிகையாளர் மன்றத் தில் பேராசிரியர் சக்திவேல் வையா புரி சனியன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதா வது, உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின் றனர். மேலும், 5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர். நாங் கள் கடந்த 18 ஆண்டுகளாக பாம்புக் கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வருகிறோம். தமிழகத்தில் மட்டும் பாம்புக்கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை மரணிக்கின்ற னர் என்பது எங்களது ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களும், கிராமப்புற பகுதி மக்களுமே பாம்புக்கடிக்கு உள் ளாகின்றனர். தேசிய அளவில் தாக் கங்களை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்சனையில் மக்களுக்கு போது மான விழிப்புணர்வு என்பது இல்லை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விஷப்பாம்புகளின் வகைகள், பாம்புக் கடியில் இருந்து தற்காத்துக் கொள் வது, அதற்கான உரிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை சுமார் 7 கோடி மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தியுள்ளோம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.