districts

img

விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், டிச.18- இளைஞர் படுகொலை செய்யப் பட்ட நிலையில், உண்மை குற்றவாளி களை உடனடியாக கண்டுபிடித்து நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி தடையை மீறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக் கன்பட்டி ஊராட்சி, முள்ளம்பட்டி பகுதியை சார்ந்த  கிருஷ்ணன்- சுமதி தம்பதின் மகன் ஆகாஷ் 24.10.2022 அன்று ஆதிக்க சாதியினரால் படு கொலை செய்யப்பட்டதாக கூறப் படுகிறது. ஆகாஷின் உடற்கூறாய் வுக்குப் பின் சந்தேக மரணம் என காவல்துறை பதிவு செய்துள்ளது. இந் நிலையில் கொலை செய்யப்பட்டு இரு  மாதங்கள் கடந்த நிலையில், ஆகாஷின்  படுகொலைக்கு காரணமானவர்களை கண்டறிய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் வி.சதாசிவம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.பெருமாள், மாவட்ட நிர்வாகி கள் கே.பூபதி, ஜோதி, மூ.து.செல்வ ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மாலா,  பி.தங்கரத்தினம் மற்றும்  இந்திய கன சங்கம் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் எம்.பி.முத்துசாமி, மாநில  துணைத்தலைவர் பி.திருமலை, மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணனயன்  மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட  தலைவர் பாலா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  முன்னதாக, போராட்டத்திற்கு நல்லி பாளையம் போலீசார் அனுமதி மறுத்த  நிலையில், தடையை மீறி காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது. இதனை யடுத்து போராட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை போலீ சார் கைது செய்து, பின்னர் மாலை யில் விடுவித்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.