districts

தலித் பெண்ணை அரை நிர்வாணமாக்கி தாக்குதல் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சேலம், மார்ச் 25- அருந்ததியர் பெண்ணை அரை நிர்வா ணமாக்கி சாதி பெயரைச்சொல்லி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித் துள்ள மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக சம்பந் தப்பட்டவரை வன்கொடுமை தடுப்பு சட்டத் தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா,  ஆடையூர் ஆர்சி ரெட்டியூர் அருந்ததியர் கால ணியை சேர்ந்த பெண் ஒருவர், வண்ணான் குட்டை பகுதியில் சரண்யா என்பவர் நடத்தும்  தையல் கடையில் பணியாற்றி வந்துள்ளார். கடையின் உரிமையாளரான சரண்யாவை செங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதை யன் என்பவர் தொலைபேசியில்  தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சரண்யாவின் கடைக்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடையில் பணியில் இருந்த பெண், ஏன் இப்படி பெண்கள் பணி யாற்றும் இடத்தில் தகாத வார்த்தையால் பேசுகிறீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதையன் வேலை அப்பெண்ணை, சாதிப் பெயரால் திட்டி தனது செருப்பால் கன்னத்தில் அடித் துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின்  ஆடைகளை கிழித்து சேதப்படுத்தியுள்ளார். மாதையன் தாக்குதலில் நிலைகுழைந்த அப் பெண், பின்னர், எடப்பாடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள் ளார். இது சம்பந்தமாக பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  மருத்துவமனையில் காவல்துறையின ரிடம் தனது வாக்குமூலத்தையும் பதிவு செய் துள்ளார். அதில் அநாகரிகமாக தகாத வார்த் தையில் பேசிய மாதையனை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டதற்காக தன்னை  அடித்து சாதிப் பெயரைக் கூறி துன்புறுத்தி யுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், வழக்கு மட்டும் பதிவு செய்த காவல்துறையி னர் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை என்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழுவிற்கு தெரியவந்தது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் நேரில் சந் தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தாங் கள் உடன் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த னர். இதுகுறித்து, சிபிஎம் சேலம் மாவட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குத லுக்குள்ளான அருந்ததியர் பெண் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுவரை மாதையனை கைது செய்யவில்லை. மேலும் அங்கு உள்ள சில பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும்  அவரின் கணவர் முருகன் இருவரிடமும் வழக்கை திரும்பப் பெற நிர்பந்தம் செய்து வருகின்றனர். இது வன்மையான கண்டனத் திற்குரியது. அருந்ததியர் பெண்ணை அடித்து துன்புறுத்தி சாதி பெயரைக் கூறி அரை நிர்வா ணமாக்கி தாக்குதல் நடத்திய மாதையனை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத் தில் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும் என தெரிவித்துள்ளது.