அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 25 நாட்களில் முடிவுறும்
அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு, மார்ச் 13- அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 98 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக என அமைச்சர் சு.முத்துசாமி தெரி வித்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னி லையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றின் உபரிநீரை குழாய்கள் மூலம் கொண்டு சென்று கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு நிலம் மற்றும் பயிர் சேதாரத்திற்கான இழப்பீடு வழங்க கோப்பு நிதித் துறைக்கு அனுப்பப்பட்டது. இழப்பீட்டுத் தொகை குறித்து நில உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திய பின் அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு சமர்ப்பித்த பிறகு இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவு அரசால் பிறப்பிக்கப்படும். திட்டப் பணிகள் 98 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. மீத முள்ள பணிகள் அனைத்தும் 20 முதல் 25 நாள்களுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி
கோவை, மார்ச் 14- அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (29). இவர் ஒன்றிய அரசு பணிக்கு முயற்சி செய்து வந் துள்ளார். அப்போது கோவை- சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலையிலுள்ள கன்சல்டன்சி நிறுவனத்தை அணுகியதாகவும் கூறப்படுகிறது. அப்போது நிறுவன உரிமையாளர் பிரசாந்த் உத்தமன் என்பவர் ரூ.9 லட்சம் கொடுத்தால், ஒன்றிய அரசு பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அசோக்குமாரும் ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார். சில நாட் களுக்கு பின் பிரசாந்த் உத்தமன் பணி நியமன ஆணையை அசோக்குமாரிடம் வழங்கி உள்ளார். ஆனால், அந்த ஆணை போலி என பின்னர் அசோக் குமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அசோக்குமார் அளித்த புகாரின்பேரில், கோவை சாய்பாபா காலனி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போதை மாத்திரை விற்பனை - கைது
கோவை, மார்ச் 14- கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து போதை மாத்திரைகளை பறி முதல் செய்தனர். கோவையில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட வற்றை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். சில இளைஞர்கள் வலி நிவாரணி மாத்திரை களை வாங்கி அதனை போதைக்காக பயன்படுத்தி வரு கின்றனர். இம்மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை அனுபவித்து வருகின்றனர். இந்நிலை யில், குனியமுத்தூர் சதாம் நகரில் உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குனியமுத்தூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது இருவரும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போதை மாத்திரை விற்ற குனியமுத்தூர், சதாம் நகரை சேர்ந்த ஷியாவுதீன்(31) மற்றும் குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த பெயிண்டர் சத்திய மூர்த்தி(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தின் முன் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 27 போதை மாத்தி ரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வனப்பகுதியில் தீ: அணைக்க சென்ற காவலர் மரணம்
ஈரோடு, மார்ச் 14- வனப்பகுதியில் தீயை அணைக்கச் சென்ற வேட்டை தடுப்பு காவலர் மரணம டைந்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டத் திற்குட்பட்ட அரேபாளையம் வனப்பகுதி யில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக கடந்த 10ஆம் தேதி காலை வனத்துறை அதிகாரி யின் உத்தரவின் பேரில் 5 பேர் கொண்ட ஒரு குழுவாக எத்தனூர் வனப்பகுதிக்கு சென்றது. அக்குழுவில் ஆசனூரில் வசித்து வருபவர் மாதையன் மகன் ஆனந்த் (30) என்பவரும் சென்றார். வனத்துறை வேட்டை தடுப்பு காவலரான இவர் திடீரென்று மயக்க மடைந்து கீழே விழுந்ததாகக் கூறப்படு கிறது. அப்போது கல்லில் அடிப்பட்டுள்ளார். இதையடுத்து உடன் வந்த வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு வெளியே ஆனந்தை கொண்டு வந்தனர். அங்கி ருந்து ஆனந்தை அவரது இருசக்கர வாக னத்தின் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த ஆனந்த் உடல் நிலை மேலும் மோசமானதால் சத்தி அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து ஈரோட்டில் உள்ள செந்தில் நரம்பியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஆனந்த் சிகிச்சை பலன ளிக்காமல் திங்களன்று நள்ளிரவு மரண மடைந்தார். இதுகுறித்து ஆசனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
கொங்கு எஸ்ஆர்வி பள்ளி விளையாட்டு விழா
சேலம், மார்ச் 14- சேலத்திலுள்ள கொங்கு எஸ்ஆர்வி பள்ளியில் முதலாமாண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. சேலம் டால்மியா போர்ட் பகுதியில் உள்ள கொங்கு எஸ்ஆர்வி பள்ளியில் நடைபெற்ற முதலாமாண்டு விளையாட்டு விழாவை, கவிதா அறிவழகன் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவி களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகள் குடை பிடித்து நடனம் ஆடியது அனைவரையும் ஈர்த்தது. இதற் கிடையே பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும், காகி தங்களை கையில் வைத்து விதவிதமான பாடல்களுக்கு ஏற்றவாறு, மழலைகள் நடனம் ஆடியது கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. முடிவில், வெற்றி பெற்ற அனை வருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டன.
கோவையில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது
கோவை, மார்ச் 14- கோவையில் பிளஸ் 1 தேர்வு செவ்வா யன்று துவங்கியது. இத்தேர்வை 34,390 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 14ஆம் துவங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாயன்று மொழித்தேர்வு நடை பெற்றது. அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 128 தேர்வு மையங்களில் பிளஸ் 1 தேர்வு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவி கள் என மொத்தம் 34,390 பேர் தேர்வெழு தினர். மேலும், கண்காணிப்பிற்காக 175 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வறட்சி கால பழப்பயிர்கள்: விவசாயிகளுக்கு பயிற்சி
உடுமலை, மார்ச் 14 - வறட்சி காலங்களில் விளைநிலங்களில் செய்ய வேண்டிய விவசாயம் குறித்து சிறப்பு பயிற்சிகள் தோட்டக்கலைத்துறையின் சார் பில் வேளாண்மை உதவி இயக்குநர் தேவி தலைமையில் உடுமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் 14 ஆம் தேதி செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இந்த பயிற்சியில், வறட்சியை தாங்கி வள ரக்கூடியதும், குறைந்த செலவில் அதிகமான மகசூல் மற்றும் லாபம் தரும் பழப்பயிர்க ளான இலந்தை, கொடுக்காபுளி மற்றும் டிரா கன் பழம் தற்பொழுது முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இந்த வகை பயிர்களை அதிக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாதிருப்பதால் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. மேலும், மனிதனுக்கு அதிக அளவில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளை கொண்டிருப்பதாலும் மக்கள் இலத்தை, கொடுக்காபுளி மற்றும் டிராகன் பழங்களை விருப்புவதால் இதன் தேவையை கருதி விவசாயம் செய்யவும் விற்பணை செய்யவும் முடியும் என்று தோட்டக்கலை கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக்தின் சார்பில் துறை அதிகாரிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கருத்துகளை வழங்கினர்.
சிறப்பு கல்விக்கடன் முகாம்: ஆட்சியர் துவக்கி வைத்தார்
கோவை, மார்ச் 14- கோவை மாவட்ட சிறப்பு கல்விக் கடன் முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந் திகுமார் பாடி செவ்வாயன்று துவக்கி வைத்தார். கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக் கான சிறப்பு கல்விக்கடன் முகாமை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவங்கி வைத்தார். இம்முகாமில் தேசியமயமாக்கப்பட்ட எச்டிஎப்சி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ் சாப் நேஷனல் பேங்க், தமிழ்நாடு மெர் கண்டைல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கலந்து கொண்டு, மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்றன. இம்முகா மின் மூலம் 350 கோடி ரூபாய் வரை கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் மாண வர்களின் கல்விக்கான இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுப்பது நல்ல பயனை அளிக்கும் என்று மாணவர்க ளின் பெற்றோர்கள் தரப்பிலும் தெரி விக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இம் முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மருந்து தயாரிக்க காகங்களை கொன்றவர் கைது
கோவை, மார்ச் 14- பொள்ளாச்சி அருகே மருந்து தயாரிக்க காகங்களை கொன்றவரை காவல் துறையி னர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் சில தினங்களாக காகங்கள் சந்தேசகத்திற்கிட மான முறையில் இறந்து வந்ததும், மேலும் இறந்த காகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச்சென்ற சம்பவம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், செவ்வாயன்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் ஒருவர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப் பிக் கொண்டிருந்தார். இதனை நாகராஜ் கண் டதையறிந்த அந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதன்பின் போலீசாருக்கு தக வல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சிஞ்சு வாடி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கஸ் தொழி லாளி சூர்யா (37) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட காகங் களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசா ரணையின்போது, வெண்படை நோயை குணப் படுத்த மருந்து தயாரிக்க காகங்களை கொன் றதாக தெரிவித்துள்ளார். இகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் உலா வந்த சிறுத்தை
கோவை, மார்ச் 14- ஆனைமலை அருகே சாலையோரம் உலா வந்த சிறுத்தையின் காணொளி வைரலாகி வருகிறது. கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட பொள்ளாச்சி வனச்சர கம் பகுதி மலையடிவாரங் களில் உள்ள காட்டுயானை, கரடி, புலி, சிறுத்தை உள் ளிட்ட விலங்குகள் கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைத்தேடி வனத்தைவிட்டு வெளியேறி வருகிறது. இந்நி லையில், சேத்துமடையிலி ருந்து நெல்லியாம்பதிக்கு வனப்பகுதி வழியாக மலை வாழ் மக்களை ஏற்றிக் கொண்டு ஜீப் சென்றபோது, சாலையோரம் சிறுத்தை தென் பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகி றது.
நாமக்கல் புத்தக திருவிழா நிறைவு: ரூ.ஒரு கோடிக்கு விற்பனை
பள்ளிபாளையம், மார்ச் 14- நாமக்கல் மாவட்டத்தின் முதல் புக் தக திருவிழா நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கு புத்த கங்கள் விற்பனை செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்முறையாக, புத்தக திருவிழாவானது நாமக்கல் - ஈரோடு சாலை, நல்லிபாளையம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில், கடந்த பிப்.28 ஆம் தேதியன்று துவங்கியது. 80க்கும் மேற் பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச் சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கர காட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, தப் பாட்டம், வில்லாட்டம், உள்ளிட்ட பல் வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கிடையே அறிஞர்கள், சமூக ஆர் வலர்கள், பேச்சாளர்களின் கருத்தரங்கு நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்றன. மேலும், புத்தக கண்காட்சி அரங்கத் தில் வண்ண மீன்கள் காட்சியகம், அறிவி யல் கோளரங்கம், வானியல் தொலை நோக்கி, மெய்நிகர் கருவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழிப்பு ணர்வு வாகனம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி என பல்வேறு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் புத்தக திரு விழாவில் பங்கேற்று வந்தனர். 10 நாட் கள் நடைபெற்று வந்த இத்திருவிழா பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 2 நாட்கள் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டார். இந்நிலையில், 12 நாட்களாக நடை பெற்று வந்த புத்தக திருவிழா அண்மை யில் நிறைவு பெற்றது. மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு புத்தகம் விற்பனை நடைபெற்று இருப்பதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரி வித்தார். மேலும், புத்தகத் திருவிழா வில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து அரசு அலுவலர்கள், பொது மக்கள் புத்தக ஆர்வலர்கள், சமூக ஆர் வலர்கள், மாணவ, மாணவியர்கள் என அனைவருக்கும் நன்றி என ஆட்சியர் தெரிவித்தார்.