districts

img

கோட்டமங்கலத்தில் பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஜூலை 20 – திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றி யம் கோட்டமங்கலம் கிராமத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலை மையில் வீடில்லா ஏழை மக்கள் கிராம  நிர்வாக அலுவலகம் முன்பாக காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டமங்கலம் ஊராட்சியில் 5ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். பெரும் பாலானோர் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று  குடித்தனங்களாக வாழும் நிலை உள்ளது.  பெரும்பான்மையானவர்கள் விவசாயக் கூலிகள் மற்றும் முறைசாராத் தொழிலாளர் களாக உள்ளனர். வறுமையில் உள்ள இம்மக் கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல  முறை உடுமலை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதிகா ரிகளிடம் நேரில் பல முறை வலியுறுத்தியும் இக்கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கோட்டமங்கலம் ஊராட் சியில் நத்தம் க.ச.எண் 257 மற்றும் 257ஏ உபரி  நிலம் க.ச. 292 ஆகிய இடங்களில் சர்வே செய் தும், வகை மாற்றம் செய்தும் ஏழை, எளிய  மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனடி யாக அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து  பட்டா வழங்க வலியுறுத்தி புதன்கிழமை கோட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம்  முன்பாக மக்களைத் திரட்டி காத்திருக்கும் போராட்டம் நடத்துவதென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. இப்போராட்டத்துக்கு கிளைச் செயலா ளர் பி.முருகன் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ் போராட்டத்தைத் தொடக்கி  வைத்தார். கோரிக்கைகளை விளக்கி ஒன் றியச் செயலாளர் என்.சசிகலா, கமிட்டி உறுப் பினர்கள் வெ.ரங்கநாதன், ஏ.தங்கவடிவே லன், ஆர்.ஓம்பிரகாஷ், எம்.சுந்தர்ராஜ், சி. ஜெ.ஸ்ரீதர், எஸ்.மோகனசுந்தரம், ஆர்.கலை வாணி, டி.சின்னான் ஆகியோர் உரையாற்றி னர். இப்போராட்டத்தின்போது, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட் சியர் கண்ணாமணி, டி.எஸ்.பி தேன்மொ ழிவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். வரும் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் கிராமத்தில் உள்ள நத்தம் இடத்தை சர்வே  செய்து தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கு வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து  போராட்டம் நிறைவு பெற்றது.