நாமக்கல், கொல்லிமலை அருகே உள்ள வளப்பூர்நாடு ஊராட்சியில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிளை அமைக்கப்பட்டது. தலைவ ராக ராஜேந்திரன், செயலாளராக பழனி, பொருளாளராக அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சங்கத் தின் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், கொல்லிமலை தாலுகா அமைப்பாளர் ஜே.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.