அவிநாசி, ஜூன் 15 - தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட் டதைக் கண்டித்து ஆதி தமிழர் பேரவை அவிநாசி தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழனன்று போராட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தொடர்புடை இடங்கள், தலைமைச் செயலகம் என சோதனை நடத்தி, பல மணி நேரம் அவரை உடல்ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர். எதேச்சதிகாரமாக செயல்பட்டு அமைச்சரை கைது செய்துள்ள ஒன்றிய அரசைக் கண்டித்து, ஆதித்தமிழர் பேரவையினர் அவிநாசி தபால் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவி நாசி காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.