மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி உடுமலை, பிப்.18- உடுமலையில் நடைபெற்ற மாவட்ட சைலாத் சிலம்பம் போட்டியில், பலர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தினர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சைலாத் சிலம்பச் சங்கம் சார்பில், 4 ஆவது ஆண்டு மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பம் போட்டி, பொள்ளாச்சி சாலையிலுள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட் டளை வளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். பகத்சிங் சிலம்பம், களரி, மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை செயலா ளர் வீரமணி வரவேற்றார். போட்டிகளை உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், விவேகானந்தா வித்யா லயா பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சிலம்ப சங்க பொதுச்செயலாளர் எஸ்.கணேசன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளார் மஸ்தான், கோவை மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சிலம்ப போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வெற்றி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம், பரிசுகள் வழங்கப் பட்டன.
பொதுமக்கள் உதவியுடன் குட்கா பொருட்கள் பறிமுதல்; பாராட்டு
பொதுமக்கள் உதவியுடன் குட்கா பொருட்கள் பறிமுதல்; பாராட்டு சேலம், பிப்.18- எடப்பாடிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை, தனிப்படை போலீசார் பொதுமக்கள் உதவி யுடன் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்திற்கு பெங்களூரு மற்றும் வடமாநி லங்களிலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன்பேரில் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சனியன்று இரவு செட்டி மாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் அழகுராஜ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழி யாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், காரிலிருந்த 2 பேர் தப்பி ஓடினர். இதையடுத்து அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் தனிப்பட்ட போலீ சார் அந்த நபர்களை துரத்தி சென்று பிடித்தனர். இதைய டுத்து காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 1050 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா பொருட்கள் மற்றும் காரை பறி முதல் செய்து, எடப்பாடி காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசார ணையில் பிடிபட்ட நபர்கள், மகாராஷ்டிராவை சேர்ந்த நாரி யண்சிகா (30) மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ராமாராம் (22) என்பது தெரியவந்தது. எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திர லேகா இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவ லுக்கு அனுப்பி வைத்தார். குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்களை பிடிக்க உதவிய பொதுமக்களுக்கு காவல் துறை யினர் பாராட்டு தெரிவித்தனர்.
அணைக்கட்டு கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.18- கடத்தூர் அருகே உள்ள பொதியம்பள் ளம் அணைக்கட்டு கால்வாயை விரைந்து சீர மைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள ஓபிளிநாயக்கம்பட்டி ஊராட்சிக்குட் பட்ட கோம்பை கிராமத்தில் பொதியம்பள் ளம் அணை அமைந்துள்ளது. வத்தல்மலை யின் கிழக்குப் பகுதியில் இருந்து ஓடும் மழை நீர், கல்லாற்று நீர் இந்த அணைப்பகுதிக்கு வருகிறது. இந்த அணையில் தேங்கும் மழை நீர் கால்வாய்கள் மூலமாக பல்வேறு ஊர்க ளில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது. கடத்தூர், மடதள்ளி, தாளநத்தம், வே.புதூர், போசி நாயக்கனஅள்ளி, லிங்கநாயக்கன அள்ளி, புதுரெட்டியூர், கொடக்கார அள்ளி, வீரகவுண் டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 16க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல் கிறது. இதன்மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பொதியம் பள்ளம் அணையில் தண்ணீர் ஓடும் பாசன கால்வாய் பகுதிகள் முறையான பராமரிப் பின்றி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் சீராக செல்வதில் தடை ஏற்படுவதால், பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதே போல் அணை மூலம் பாசன வசதி பெறும் ஏரிகளுக்கும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள் ளது. நெல், பூக்கள், காய்கறிகள், கரும்பு சாகு படி அதிகம் கொண்ட இந்த அணை பாசன பகுதி கால்வாய்களின், பல இடங்களில் முறை யான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், கால் வாய்களில் தேவை உள்ள இடங்களில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண் டும். கடைமடை பகுதிக்கும் தண்ணீர் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்ப குதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.
அனுமதியின்றி மரங்கள் அழிப்பு
அனுமதியின்றி மரங்கள் அழிப்பு சேலம், பிப்.18- எடப்பாடி நகராட்சிக் குட்பட்ட பகுதியில் நல்ல நிலைமையில் இருந்த மரங் களை, வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், எடப் பாடி நகராட்சி, 12 ஆவது வார்டுக்குட்பட்ட வெள் ளாண்டிவலசு பகுதியில் உள்ள மயானத்தில் காய்ந்து போன மரங்களை வெட்டுவ தற்காக நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப் பந்தம் எடுத்தவர்கள் நன்றாக உள்ள பச்சை மரத்தையும் வெட்டி சாய்த்து எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஒப்பந்தம் விடப்பட்ட பட்டுபோன மரங் களை வெட்டாமல் நன்றாக உள்ள, விலை உயர்ந்த பச்சை மரங்களைவெட்டி எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணை யரிடம் கேட்டபோது, பட்டுப் போன காய்ந்த மரங்களை வெட்டுவதற்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளதா கவும், அதன்படி இல்லாமல் நன்றாக உள்ள மரங்களை வெட்டி இருந்தால் கண்டிப் பாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார்.
பாமரனுக்கு பாதுகாப்பு இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது
சேலம், பிப்.18- மாவட்டச் செயலாளர் ஊழலை அம் பலப்படுத்தியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜூ, அதிமுகவில் பாமரனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக, குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருபவர் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்க டாசலம். 10 ஆண்டுகளுக்கு மேல் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பொழுது, சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாக அதிமுக ஒன் றியச் செயலாளர் ஏ.வி.ராஜூ கடந்த இரண்டு நாட்களாக தெரிவித்து வந்தார். மேலும், இது சம்பந்தமாக கட்சியின் பொதுச்செயலாளரிடம் விசாரிக்கும் படி மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என வருத்தம் தெரிவித்திருந் தார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரு மான எடப்பாடி பழனிசாமி, ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏ.வி. ராஜூவை நீக்கி அறிக்கை வெளியிட் டுள்ளார். இதுகுறித்து ஏ.வி.ராஜூ செய்தியா ளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் தற்போது பாமர மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பிரச்சனை ஏற் படும் போது கட்சியின் தலைமைக்கும், பொதுச்செயலாளருக்கும் உரிய முறை யில் தெரிவித்தும், எந்தவொரு விசார ணையும் நடைபெறாமல் என்னை கட்சி யிலிருந்து நீக்கியது சரியில்லை. தான் பொதுக்குழு உறுப்பினராக இருந்தும், உரிய விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும் அளிக்காமல் அடாவடியாக கட்சியிலி ருந்து நீக்கியுள்ளனர். ஏழை மக்களின் பங்காளி என கூறிக்கொள்ளும் எடப் பாடி பழனிசாமி, தற்போது பணம் இருப் பவர்களை மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது. வெங்கடாச்சலம் எதிர்க்கட்சி தலைவரின் பினாமியாக கூட இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் அதிமுக வில் நிலவி வருகிறது. இதேநிலை நீடித் தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அதிமுக சந்திக்கும் என ஏ.வி.ராஜூ தெரிவித் துள்ளார்.
அரிவாளால் வெட்டி பள்ளி மாணவர் கொலை
அரிவாளால் வெட்டி பள்ளி மாணவர் கொலை கோவை, பிப்.18- கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், நஞ்சப்ப செட்டி யார் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் பிரணவ், தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சனியன்று தனது நண்பர்களுடன் ஒண்டிப்புதூர் பகுதி யில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், பிரணவின் கண் ணில் மிளகாய் பொடி தூவி, அரிவாளால் அவரது கழுத்து மற் றும் வலது கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். இதுகு றித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல் லூர் போலீசார், உயிருக்கு போராடிய பிரணவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, பள்ளி மாண வனை கொலை செய்ததாக சூலூர் காவல் நிலையத்தில் வாலி பர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசார ணையில், அவர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தி பன் என்பவரது மகன் பேரரசு என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதும் தெரி யவந்தது. மேலும் பிரணவ், பேரரசு மற்றும் பேரரசுவின் தங்கை ஆகி யோர் ஒண்டிப்புதூரில் உள்ள பள்ளியில் படித்து வந்த போது, கடந்த 2022 ஆம் ஆண்டு பேரரசுவின் தங்கையை பிரணவ் உட்பட நான்கு மாணவர்கள் கிண்டல் செய்ததா கவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேரரசு நால்வரை யும் கேட்டபோது, நால்வரும் இணைந்து அவரை தாக்கிய தாக தெரிகிறது. இதனையடுத்து தனது தங்கையை கிண்டல் செய்து, தன்னை தாக்கிய நால்வரையும் பழிவாங்க நினைத்த பேரரசு, பிரணவை கொலை செய்தது தெரியவந்தது. இதனை யடுத்து போலீசார் அவரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான கண் காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காட்டில் வேன் கவிழ்ந்து விபத்து
ஏற்காட்டில் வேன் கவிழ்ந்து விபத்து சேலம், பிப்.18- சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு சுற்றுலாப்பயணிகளுடன் திரும்பிய வேன், அடிவாரம் பகுதி யில் உள்ள சுங்கச்சாவடி அருகில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுகாதா ரத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
கண்ணாடி மாளிகையில் மலர்கள் அலங்காரம்
கண்ணாடி மாளிகையில் மலர்கள் அலங்காரம் உதகை, பிப்.18- நீலகிரி மாவட்டம், உத கைக்கு நாள்தோறும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிக ளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அதன்படி, சுற்றுலாப் பயணிகளை கவ ரும் வகையில் பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கோடை காலத் தின் போது பூங்கா முழுவதி லும் மலர்கள் பூக்கும் வகை யில் செடிகள் நடவு செய்யப் பட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து செடிகளில் மலர்களை காண முடியும். கோடை சீசன் மற் றும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. தற் போது பூங்கா முழுவதிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட் டுள்ளது. மேலும், 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், சுற்றுலா பய ணிகள் ஏமாற்றம் அடையா மல் இருக்க கண்ணாடி மாளி கையில் லில்லியம் மலர் செடி களும் அலங்கரித்து வைக் கப்பட்டுள்ளன.
கோவையில் நாய்கள் கண்காட்சி
கோவையில் நாய்கள் கண்காட்சி கோவை, பிப்.18- கோவையிலுள்ள தனி யார் கல்லூரியில் நடை பெற்ற நாய்கள் கண்காட் சியில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நாய்களின் அணிவகுப்பு களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், இந் துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நாய்கள் கண் காட்சி நடைபெற்றது. 3 ஆவது ஆண்டாக நடை பெற்ற இக்கண்காட்சியில், தமிழக நாட்டு இன நாய்க ளான ராஜபாளையம், சிப் பிப்பாறை, கன்னி, கோம்பை இனங்களும், பிற இந்திய நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு வகை நாய்க ளான ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர், புள் டாக் உள்ளிட்ட என ஏராள மான நாய்கள் கலந்து கொண் டன. இதில் வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, நாய்கள் ஓடும் வேகம் ஆகிய வற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்வு செண் யப்பட்டு பரிசு வழங்கப்பட் டன.