திருப்பூர், ஆக. 11 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளிவந் துள்ளன. இதில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்றவர்களில் ஆறு பேர் தாராபுரம் அம் பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பணி நியமனம் பெற்றவர்கள் விபரம் வருமாறு: ராஜேஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகவும், யமுனா விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகவும் பணி நியமனம் பெற்றுள் ளனர். இவர்கள் தவிர, திவ்யா ஊரக வளர்ச்சித் துறை திருப்பூர் இளநிலை உதவியாளர், முகமது இஸ்மாயில் சுகாதாரத் துறை இளநிலை உதவியாளர், மதன்குமார் கல்வித்துறை இளநிலை உதவியாளர், கவியரசன் ஊரக வளர்ச்சித் துறை இளநிலை உதவியாளராக பணி நியம னம் பெற்றுள்ளனர். தாராபுரம் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி பெற்று தற்போது பணி நியமனம் பெற் றுள்ள ஆறு பேருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாராபுரம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.