districts

img

ஊழியர் விரோத பட்ஜெட்: அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 24- அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு களை ஒன்றிய அரசு புறம் தள்ளி விட்ட தாக குற்றம்சாட்டி, சேலத்தில் புதனன்று அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப் பும் மத்திய பட்ஜெட்டில் இல்லை, ஊதி யத்தில் எந்த மாற்றமும் இல்லை, பழைய பென்சன் திட்டத்தை நடைமு றைப்படுத்த அறிவிப்பு இல்லை. எட்டாவது ஊதிய மாற்றம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை சார்பில், கோரிமேடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட் டக்கிளை தலைவர் சி.முருகப்பெரு மாள் தலைமை ஏற்றார். இதில் வட்டக் கிளை செயலாளர் ஸ்ரீபதி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் அருள்மொழி ஆகியோர் உரையாற்றி னர். தருமபுரி இதேபோன்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், தரும புரி மாவட்டம், கடத்தூர் பிடிஒ அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டத் தலைவர் அன்பழகன்  தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் அனுசுயா ஆகி யோர் பங்கேற்றனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் சதீஷ், மாவட்ட இணைச்செயலாளர் சுரேஷ், வட்டத் தலைவர் கார்த்திக் செல்வம், வட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் பேசினார். பாலக் கோடு பிடிஒ அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலை வர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் குணசேக ரன் பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தேவகி வாழ்த்தி பேசினர். தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலை வர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் தெய்வானை சிறப்புரை யாற்றினார்.