districts

img

போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான்

தருமபுரி, ஜூன் 23- போதைப்பொருள் எதிர்ப்பை வலியுறுத்தி தருமபுரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, போதைப்பொருள் எதிர்ப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் பரிசு சுபதாஸ்ரீ, இரண்டாம் பரிசு குமுதா மூன்றாம் பரிசு கீர்த்திகா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முதல் பரிசு லோகேஷ், இரண்டாம் பரிசு அன்பரசு, மூன்றாவது பரிசு நவீன் குமார் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பா ளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில், காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், தடகள அமைப்பின் தலைவர் டி.எஸ்.சரவணன், மாவட்ட விளை யாட்டு அலுவலர் தே.சாந்தி, விளையாட்டு தடகளப் பிரிவு செயலாளர் அருவி ஆகியோர் கலந்து கொண்டனர்.