districts

img

திருநங்கைகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், ஏப்.10- நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி யில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திருநங்கைகள் பங்கேற்ற தேர்தல் விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி பூங்கா  சாலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமை யில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித் கௌர்  முன்னிலையில் இப்பேரணி நடைபெற்றது. இதைத்தொ டர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் துண்டு பிரசுரங்களை  வழங்கினர். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய  இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம்,  இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படா மல் எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலில் வாக்களிப் பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி ஏற் றுக்கொண்டனர். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.